உயர்ரத்த அழுத்தததை நீங்கள் கண்டுகொள்ளாமல் விடக்கூடாது. அப்படி கண்டுகொள்ளாமல் விட்டால், பல பக்கவிளைவுகளை இது ஏற்படுத்தும். உயர் ரத்த அழுத்ததிற்கு நீங்கள் மருந்துகளை எடுத்துகொண்டாலும், சரியான உணவை தேர்வு செய்வதன் மூலம் இந்நோய்க்கு தீர்வு காண முடியும்.
பச்சை காய்கறிகள். கீரை, கேல், லெட்யூஸ் இலைகள் ஆகியவற்றில் பொட்டாஷியம், மெக்னீஷியம், கால்ஷியம், ஆண்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது. சிறுநீரகத்தில் உள்ள அதிகபடியான சோடியத்தை இது நீக்கிவிடும்.
வாழைப்பழம்; இதில் அதிக பொட்டாஷியம் இருப்பதால் உயர் ரத்த அழுத்ததை சீராக்கும்.
பீட்ரூட்; இதில் நைட்ரிக் ஆசிட் இருப்பதால், ரத்த குழாய்களை விரிவுப்படுத்தும்
பூண்டு; இதில் ஆண்டிபயாடிக், ஆண்டிபங்கல் குணம் உள்ளது. சதைகள் ஓய்வெடுக்க உதவுகிறது. இதன் மூலம் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.