சளித் தொல்லை மற்றும் அஜிராணத்திற்கு இந்த ஒரு மிட்டாய் நல்ல நிவாரணம் தரும். வெறும் வயிற்றில் இந்த மிட்டாய் சாப்பிட்டால் மிகவும் நல்லது.
செய்முறை
இஞ்சி
தேன்
எலுமிச்சை சாறு
எண்ணெய் சிறு அளவு
சர்க்கரை
செய்முறை : நீங்கள் இஞ்சியை நன்றாக கழுவி, அதை துருவ வேண்டும். அப்படி துருவிய இஞ்சியிலிருந்து சாறை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும். அதன் சக்கையை டீ போடும்போது அதில் பயன்படுத்தலாம். இப்போது ஒரு பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து உருக்க வேண்டும். சர்க்கரை கரைய ஆரம்பிக்கும்போது, அடுப்பை அணைத்து அதில் இஞ்சி சாறு, எலுமிச்சை, தேன் ஆகியவையை சேர்த்து கலக்க வேண்டும். தற்போது ஒரு தட்டில் எண்ணெய் தடவி, அதில் இந்த கலவையை வட்ட வடிவில் ஊற்ற வேண்டும். சிறிது நேரம் கழித்து அதை ஒரு பாத்திரத்தில் போடவும்.