எல்லா வயதினருக்கும் இந்த வெள்ளை முடி பெரும் சிக்கலாக இருக்கிறது. இந்நிலையில் இயற்கையான முறையில் வெள்ளை முடியை போக்க இந்த டிரிங்கை வீட்டிலேயே செய்து பாருங்க.
செய்முறை:
ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் 1 கைப்பிடி அளவு தேங்காய் துருவல், 1 கைப்பிடி அளவு கழுவிய கருவேப்பிலைகள், 1 நெல்லிக்காய் , 1/2 கப் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக அரைத்து வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த சாறில் இனிப்பு சுவைக்காக சுத்தமான தேன், நாட்டு சர்க்கரை, பனைவெல்லம் அல்லது சாதாரண வெல்லம் கூட சேர்த்துக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான்.
ஆனால் இனிப்பு சுவைக்காக எதையும் சேர்க்காமல் வடிகட்டி எடுத்த சாறை காலை வெறும் வயிற்றில் அப்படியே குடித்து வர வேண்டும். இந்த பானத்தை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் குடிக்கலாம். தொடர்ந்து இந்த ட்ரிங்கை குடித்து வரும்போது உங்களுடைய நரைமுடி பிரச்சனைக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். நரை முடி வராமல் நீண்ட நாட்களுக்கு தள்ளிப் போடலாம்.
அதோடு மட்டுமல்லாமல் உங்களுடைய முடி அடர்த்தியாக வளரவும் இந்த பானம் உதவிக்காக இருக்கும். முடி உதிர்வதை தடுக்கும். அதே சமயம் விட்டமின் சத்து அதிகம் நிறைந்த ஒரு நெல்லிக்காயை தினம்தோறும் உணவோடு சேர்த்து வரும்போது நம்முடைய வயதான தோற்றம் கூட தள்ளிப் போகும். சருமம் பளபளப்பாக மாறும்.
இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் பருகலாம். உங்களுக்கு சர்க்கரை வியாதி இருந்தால் இந்த பானத்தில் சேர்க்கக்கூடிய தேங்காயின் அளவை மட்டும் குறைத்துக் கொள்ளுங்கள். இனிப்பு சுவைக்காக சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இந்த பானத்தில் எந்த பொருளையும் சேர்க்கக்கூடாது. மற்றபடி குறைந்த செலவில் எல்லோராலும் தயார் செய்யக்கூடிய இந்த ஹெல்த் ட்ரிங்க் அழகையும் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க கூடிய இடத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது.