ஒரு நாள் முழுவதும் நாம் உத்வேகத்துடன் செயல்பட, காலையில் நாம் என்ன செய்கிறோம் என்பதை வைத்துதான் அது தீர்மானிக்கப்படுகிறது. காலையில் சிலருக்கு அஜீரணமாக இருக்கும், சிலருக்கு வயிறு உப்பி இருப்பது போல் இருக்கும். சிலர் சோர்வாக காணப்படுவர். காலையில் நாம் சாப்பிடும் உணவுதான், நாம் நாள் முழுவதும் எப்படி செயல்படப் போகிறோம் என்பதை முடிவு செய்கிறது. குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் காலை உணவை சரியாக எடுத்துகொள்ள வேண்டும். அப்படி செய்யும்போதுதான் ரத்தில் சக்கரை அளவு சீராக இருக்கும்.
நீண்ட நேர தூக்கத்திற்கு பிறகு உங்கள் உடலுக்கு நீர் தேவைப்படுகிறது. இதனால் காலை எழுந்தவுடன் 2 கப் தண்ணீர் குடிக்க வேண்டும். வில்வ மரத்தின் இலை, துளசி இலை ஆகியவற்றை அரைத்து தண்ணீரில் போட்டு குடித்தால் சக்கரை நோயாளிகளின் உடலுக்கு மிகவும் நல்லது. வெறும் வயிற்றில் இந்த இலைகளின் சாறை குடிக்க வேண்டும். இதனால் குறைந்த அளவில் ரத்தில் சக்கரை இருக்கும். அர்ஜுன மரத்தின் பட்டை தண்ணீரில் சேர்த்து குடித்தால் ரத்தில் சக்கரை அளவு உயர்வாக இருந்தால் அதை கட்டுப்படுத்தும்.
அர்ஜீன மரத்தின் பட்டை பொடியை தண்ணீரில் சேர்த்து இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட்டு, காலையில் குடிக்கவும். நீங்கள் காலை எழுந்தவுடன் அஜீரணமாக உணர்வதற்கு காரணம், இரவில் நேரம் கழித்து சாப்பிடுவதால்தான். நீங்கள் தூங்கப்போவதற்கு மூன்று மணி நேரம் முன்பு இரவு உணவை சாப்பிட வேண்டும். அஜீரணத்தை குணமாக்க 8 முதல் 10 கருப்பு திராட்சையை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் சாப்பிட வேண்டும்.
வயிறு உப்பி இருந்தால், 1 டேபிள் ஸ்பூன் சீரகம், 1 ஏலக்காய், 1 டேபிள் ஸ்பூன் வெந்தையம் , ஓமம் சிறிய அளவில் , தேயிலை ஆகியவற்றை 500 எம்எல் தண்ணீரில் சேர்த்து, அளவில் பாதியாகும் வரை சுண்ட வைக்கவும். இதை பருகினால் நல்லது.
நீரிழிவு நோயாளிகள், அதிகளவில் காலை உணவை எடுத்துகொள்ளகூடாது. சரியான அளவில் கார்போஹைட்ரேட் மற்றும் புரத சத்து இருப்பதுபோல் பார்த்துகொள்ளவும். காலை உணவை சற்று அதிகமாக சாப்பிடலாம் என்று கூறப்படுவது சரியான வாதம் இல்லை. ஏற்கனவே இரவு உணவை நமது உடல் செரிமாணம் செய்ய முயற்சி செய்துகொண்டிருக்குபோது காலை உணவை அதிகமாக சாப்பிடக்கூடாது.
வெள்ளைப்பூசணிக்காய் சக்கரை நோயாளிகள் காலையில் சாப்பிடலாம். வெள்ளைப்பூசணி ஜூஸ், எலிமிச்சை சாறுடன் சேர்த்து சாப்பிடலாம். பாலில் பழங்கள் சேர்த்து சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.