செம்பருத்திற்கு பல வித மருத்துவ பயன்கள் இருக்கிறது. செம்பரித்தியிலிருந்து எடுக்கப்பட்ட சாறை வைத்து ஆய்வு செய்தபோது, ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
மேலும் செம்பருத்தியில் உள்ள பையோ ஆக்டிவ் பொருள், சிறுநீரகத்தை சுத்திகரிக்க உதவுகிறது. இதனால் ரத்த அழுத்தம் குறைகிறது.
ரத்த குழாய்களில் படிந்த கொழுப்பு, உதிர்ந்து ரத்தில் கலக்கும் நிலை ஏற்படும் . இது மரணத்தைகூட ஏற்படுத்தலாம் . செம்பருத்தியில் இருக்கும் நன்மைகள் கெட்ட கொலஸ்ட்ரால் ரத்த குழய்களில் படிவதை தடுத்து நிறுத்தும்.
உடலில் உள்ள கொழுப்பு , ஆக்ஸிடேஷன் ஆனால், ரத்த குழாய்களில் படிகிறது. இதனால் இதயம் தொடர்பான மற்ற நோய்கள் ஏற்படும். இந்நிலையில் இந்த ஆக்ஸிடேஷனை தடுக்க, நாம் ஆண்டி ஆக்ஸிடண்ட் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். செம்பருத்தியில் ஆண்டி ஆக்ஸிடண்ட், பிளாபோனாய்ட்ஸ், பினாலிக் காம்பைண்ட்ஸ், பீட்டா கரோட்டினி, வைட்டமின் சி இருக்கிறது.
வீக்கத்தை குறைக்கும் தன்மை கொண்டது செம்பருத்தி. வீக்கம் என்பது ஒரு வகையில் எதிர்பு சக்திதான். ஆனால் காரணம் அற்ற வீக்கம், ரத்த குழாய்களில் கொழுப்பு படிவதை ஊக்குவிக்கும் . இதனால் உடலில் உள்ள சதை பாதிக்கப்படும்.