நாம் அதிகமாக சாப்பிடுவதால் மற்றும் அஜீரணத்தால் அடிக்கடி நமக்கு வயிற்று வலி ஏற்படும் . மாத்திரைகள் வயிற்று வலியில் இருந்து நிவாரணம் வழங்கினாலும், அதிக நாட்கள் இதை எடுத்துகொள்ள முடியாது. இதனால் வீட்டிலே சில பானங்களை செய்து குடித்தால் இதற்கு தீர்வாக இருக்கும்.
பெருஞ்சீரக டீ
வயிறு எரிவதுபோல தோன்றும் உணர்வை, பொருஞ்சீரகம் குறைக்கும். இதில் உள்ள என்சைம், உணவை செரிமாணமாக்க உதவும். இதில் உள்ள நார்சத்து வயிறு செயல்பாடுகளை சீராக்கும் மேலும் மலச்சிக்கலை தடுக்கும்.
ஒரு கப் தண்ணீர் நன்றாக கொதிக்க வைக்கவும். இதில் 1 டேபிள் ஸ்பூன் பெருஞ்சீரகம், 2 துளசி, சேர்த்து கொதிக்க வைக்கவும். தற்போது இதை நீங்கள் குடிக்கலாம்.
மசாலா தயிர்
ஒரு கப் தயிரில் சீரக பொடி சேர்த்து அதில உப்பு சேர்த்து குடித்தால் வயிற்று வலி நீங்கும். இதுபோலவே இஞ்சி டீ மற்றும் லெமன் டீ செரிமாணப் பிரச்சனையை தீர்க்கும் மேலும் வயிற்று வலிக்கு தீர்வாக இருக்கும்.