தேனை சரியாக பயன்படுத்தாவிட்டால் அது விஷமாகும் என்று சத்குரு தெரிவித்துள்ளார். இந்நிலையில் தேனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தேன்-க்கு அதிக மருத்துவ நன்மைகள் இருக்கிறது. சக்கரை பயன்படுத்த வேண்டிய இடத்தில் தேனை நாம் பயன்படுத்துகிறோம். பல தலைமுறைகளாக சூடான எலுமிச்சை சாறு கலந்த தண்ணீரில் தேனை கலந்து சாப்பிடுகிறோம். இது உடலில் இருக்கும் நஞ்சுகளை வெளியேற்றும். மேலும் உடல் எடையை குறைக்கும்.
இந்நிலையில் கொதிக்கும் தண்ணீரில் தேனை கலக்க கூடாது. அப்படி செய்யும் போது தேன் விஷமாக மாறுகிறது. மேலும் தேனை சமைத்து சாப்பிடக்கூடாது. தேனை அதன் இயற்கையான நிலையில்தான் சாப்பிடவேண்டும். அப்படியே சாப்பிடவதுதான் நல்லது என்று சத்குரு தெரிவித்துள்ளார்.
இதில் பல்வேறு சத்துக்கள் இருக்கிறது. ஆண்டி ஆக்ஸ்டண்ட் இருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகிறது. தேனை நமது காயங்களை ஆற்றுகிறது. ரத்ததில் உள்ள சர்க்கரை அளவை சீர்படுத்துகிறது. இதில் கால்ஷியம், மெக்னீஷியம், பொட்டாஷியம், சிங்க். அமினொ ஆசிட், என்சைம்ஸ் ஆகியவை அதில் இருக்கிறது.