சர்க்கரை நோய் பாதிப்பு என்பது குணப்படுத்த முடியாத ஒரு குறைபாடு. உணவு முறை மாற்றம், உடல் பயிற்சி மற்றும் அதற்கான மருந்துகளை சரியாக எடுத்துகொள்வது மட்டுமே சர்க்கரை நோய்யை கட்டுபட்டுத்தும். இந்நிலையில் நாம் எடுத்துகொள்ளும் சர்க்கரை, இனிப்பு வகைகள் மற்றும் சில உணவு வகைகள் நமது சர்க்கரை அளவை அதிகரிக்கும். இந்நிலை சர்க்கரைக்கும் மாற்றாக கூறப்படும், கருப்பட்டி, வெல்லம், தேன் ஆகியவற்றை சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் மருத்துவர்களின் அறிவுரைப்படி சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தப்படும் கருப்பட்டி, வெல்லம், தேன் ஆகியவை மீண்டும் குளுக்கோஸாக மாறி நமது ரத்தத்தில் கலக்கும்.
இதனால் மேலும் சர்க்கரை அளவு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. இந்நிலையில் இனிப்பாக சாப்பிட வேண்டும் என்று நினைத்தால் செயற்கையான இனிப்பூட்டிகளை சாப்பிடுவது நல்லது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இதுபோல உணவில் பழங்கள் சரியான அளவில் எடுத்துகொள்வதும் நல்லது. சில சமயங்களில் நாம் தண்ணீர் குடிக்காமல் இருந்தால், சாப்பிட வேண்டும் என்று தோன்றும். இதனால் நாம் இனிப்பை சாப்பிட்டுவிடுவோம். இதனால் அடிக்கடி தண்ணீர் குடிப்பது நல்லது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil