சிட்ரஸ் பழங்களில் கரைக்கூடிய நார்சத்து பெக்டின் இருக்கிறது. இவை வயிற்றில் உள்ள கொலஸ்ட்ராலோடு சேர்ந்து உடலில் இருந்து வெளியாகும். குறிப்பாக நமது உடல் இதை உள்வாங்கிக்கொள்வது மூலம் நடைபெறும்.
ஆரஞ்சு, எலுமிச்சை, கிரேப் ஃபுரூட் ஆகிய சிட்ரஸ் பழங்கள் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி, இதயத்தை பாதுகாக்கிறது. இந்நிலையில் இதில் வைட்டமிஸ், வைட்டமின் சி, மினரல்ஸ், நார்சத்து, ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது.
சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி உள்ளது. இது ஒருவகையான ஆண்டி ஆக்ஸிடண்ட் இவை ரத்த குழாய்களில் கொழுப்பு படிவதை குறைக்கும் ஆற்றல் கொண்டது. இதனால் மாரடைப்பு வருவதும் மற்றும் பக்கவாதம் வருவதை தடுக்கும். கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி இதை செய்கிறது. கொலஸ்ட்ராலில் இரண்டு வகை உள்ளது. நல்ல கொலஸ்ட்ராலை நாம் எச்.டி.எல் என்று அழைப்போம். கெட்ட கொலஸ்ட்ராலை எல்.டி.எல் என்று அழைப்போம். கெட்ட கொல்ஸ்ட்ரால்தான் இதய ரத்த குழாய்களில் கொழுப்பு படிவதற்கு காரணம். மேலும் இவை ரத்த குழாய்களை குறுகலாக மாற்றுகிறது. இந்நிலையில் சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி மட்டுமல்லாமல் பொட்டாஷியம், போலேட், வைட்டமின் பி இருப்பதால், இது மேலும் இதயதிற்கு நல்லது .
சிட்ரஸ் பழங்களில் இருக்கும் நார்சத்து , சாதாரண நார்சத்து இல்லை. இதில் இருக்கும் 60 முதல் 70 % நார்சத்து பெக்டின் என்று அழைக்கப்படுகிறது. இவை தண்ணீரில் கரைக்கூடியது. இவை ஜீரணிக்கப்பட்ட பிறகு ஜெல் போல மாறும். இதனால் சர்க்கரையை உடல் எடுத்துகொள்ள அதிக நேரம் எடுக்கும். இந்த பெக்டின் வயிற்றில் இருக்கும்போது, கொல்ஸ்ட்ரால் உடன் கலந்து, அதை வெளியேற்றும்.
ஆரஞ்சு பழத்தில் பைட்டோ ஸ்டிரால் உள்ளது. இவை ஜீரணமாகும்போது ,கொலஸ்ட்ராலை தடுத்து, குடலுக்கு செல்லாமல் தடுக்கிறது. சிட்ரஸ் பழங்களில் உள்ள பிளப்போனாய்ட்ஸ் இதய வீக்கத்தை குறைக்கும். இதனால் இதயம் தொடர்பான எந்த நோய்யும் ஏற்படாது.
தினமும் ஒன்று அல்லது 2 சிட்ரஸ் பழங்களை எடுத்துக்கொள்ளலாம். அதை ஜூஸ் போடாமல் அப்படியே எடுத்துக்கொள்ள வேண்டும்.