/indian-express-tamil/media/media_files/2025/08/31/screenshot-2025-08-31-171636-2025-08-31-17-17-49.jpg)
சில சமயங்களில், ஒருமுறை சமைக்கும் குழம்பு, மறுநாள் இன்னும் சுவையாக இருக்குமே என்று தோன்றும். அப்படி ஒரு அருமையான, புளிப்புச் சுவை நிறைந்த தக்காளி குழம்பு ரெசிபி எப்படி செய்வது என்று உஷாஃபுட் ஸ்பாட் இன்ஸ்டா பக்கத்தில் செய்து காட்டியிருப்பது பற்றி பார்ப்போம். வேலைக்குச் செல்பவர்கள், விடுமுறை நாட்களில் சமைத்து வைத்துக்கொண்டால், இரண்டு முதல் மூன்று நாட்களுக்குக் கவலைப்படாமல் சாப்பிடலாம்.
இது சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி என அனைத்தோடும் சிறப்பாக பொருந்தும். இந்தக் குழம்பு சுடுசாதத்தில் நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டால், அதன் சுவை நன்றாக இருக்கும். ஒருமுறை சமைத்தால், போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு அதன் மணம் வீட்டையே நிறைக்கும். பொதுவாக இதனை இரவே நேரத்தில் சப்பாத்தி அல்லது தோசை, இட்லிக்கு வைத்து சாப்பிடலாம் சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
வேர்க்கடலை எண்ணெய் - தேவையான அளவு
கிராம்பு, பட்டை, சோம்பு - சிறிது
முந்திரி - 20 கிராம்
சின்ன வெங்காயம் - 50 கிராம்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 3
கசகசா - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - தேவையான அளவு
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தேங்காய் - 50 கிராம்
எண்ணெய் - தேவையான அளவு
கிராம்பு, பட்டை, சோம்பு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
ஏலக்காய் - 3
தண்ணீர் - 1 குவளை
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு கடாயில் சிறிதளவு வேர்க்கடலை எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், கிராம்பு, பட்டை, சோம்பு, முந்திரி, சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், தக்காளி சேர்த்து குழைய வதக்கவும். பிறகு கசகசா, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் துருவிய தேங்காய் சேர்த்து, வாசனை வரும் வரை நன்கு வதக்கவும்.
இந்த கலவையை ஆற வைத்து, சிறிது தண்ணீர் சேர்த்து, ஒரு மிக்சியில் போட்டு, மையாக அரைத்து தனியாக வைக்கவும். அதே கடாயில், மீதமுள்ள எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். எண்ணெய் சூடானதும், கிராம்பு, பட்டை, சோம்பு, ஏலக்காய், மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். இப்போது அரைத்து வைத்த மசாலாவை கடாயில் சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.
தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். கலவையை நன்கு கலக்கி, அடுப்பை மிதமான தீயில் வைத்து, குழம்பை சுமார் 10 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும். குழம்பு கெட்டியாகி, எண்ணெய் பிரிந்து வரும்போது அடுப்பை அணைத்து விடவும். இந்த சுவையான வெங்காய தக்காளி குழம்பு இப்போது பரிமாறத் தயார். சாதம் அல்லது டிபனுடன் இதை சுவைத்து மகிழலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.