இட்லி மாவு அரைப்பதில் எப்போதும் பெரும் சிக்கல் நிலவுகிறது. சில வாரங்கள் வரை மாவை சேமிக்க வேண்டும் என்று நாம் நினைப்போம், ஆனால் சில நாட்களில் புளித்துவிடுதால், அரைத்த மாவு வீணாகிவிடுகிறது. இந்நிலையில் இட்லி மாவை அரைக்கும்போது சில வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும்.
அரிசியை மூன்று முதல் நான்குமணி வரை மட்டுமே ஊறவைக்க வேண்டும். உளுந்தை ஒரு மணி நேரம் மட்டுமே ஊறவைக்க வேண்டும். இதற்கு மேல் ஊறவைப்பதால்தான் மாவு புளித்துவிடுகிறது.
மாவை அதிக நேரம் அரைக்ககூடாது. அரிசி அரைபட்டவுடந்தான் உளுந்தை போட வேண்டும். மேலும் ஊளுந்து அரைபட 30 நிமிடங்கள் போதுமானது. மேலும் மாவு அரைக்கும்போது குளிர்ந்த நீர் பயன்பத்துவது மிகவும் நல்லது. இதனால் மாவின் அளவு அதிகமாகும்
மேலும் மாவை உப்பு சேர்க்காமல் சேமித்து வைக்க வேண்டும். மேலும் உப்பு சேர்த்த மாவை 3 மணி நேரம் கழித்து குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும்.