மிஞ்சிய இட்லிகளை வைத்து இந்த மாதிரி உப்புமா செய்தால், சலிப்பு ஏற்படாமல் சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்
மிஞ்சிய இட்லி
இட்லி மிளகாய் பொடி
வெங்காயம்
இஞ்சி
உப்பு
கருவேப்பில்லை
பச்சை மிளகாய்
கடுகு
உளுத்தம் பருப்பு
தேங்காய்
செய்முறை
முதலில் இட்லியை உதிர்க்க வேண்டும். இப்படி செய்யும்போது தண்ணீரை தொளிக்க வேண்டும். தொடர்ந்து ஒரு பாத்திரத்தில் எண்ணெய் எடுத்துகொண்டு அதில், கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பில்லை, பச்சை மிளகாய், தேங்காய் துருவியது, வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்க வேண்டும். தொடர்ந்து உதிர்த்த உட்லி உப்புமா மற்றும் உப்பு, இட்லி மிளகாய் பொடி சேர்த்து கிளரவும்.