ஒரு தேங்காய் சட்னியை அரைக்க தேங்காய் துருவ வேண்டும், அரைக்க வேண்டும் தாலிக்க வேண்டும். இதுபோலவே வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி சட்னி என்றாலும் நறுக்க வேண்டும் வதக்க வேண்டும் தாலிக்க வேண்டும். இப்படி எந்த சிரமும் பட வேண்டாம். ஒரு பொடியை போட்டு, தண்ணீர் கலந்தால் சட்னி ரெடியாகிவிடும். அவசரமாக செல்லும் உங்கள் வாழ்க்கையில் ஈசியா இன்ஸ்டன்ட் சட்னி பொடி எப்படி செய்யலாம் என்று தெரிந்துள்ளலாம்.
தேவையான பொருட்கள்
வேர்கடலை, உளுந்தப் பருப்பு, தேங்காய் துருவல், வத்தல் மிளகாய், பூண்டு, கருவேப்பில்லை, பொட்டுக்கடலை
செய்முறை
வேர்கடலையை ஈரத் தன்மை போகும் வரை வறுத்து எடுக்கவும். தோலை நீக்குவதும், நீக்கமால் இருப்பதும் உங்கள் விருப்பம், ஆனால் தோல் இருந்தால் சட்னி துவர்பாக இருக்கும் என்பதால் வேர்கடலையின் தோலை நீக்குவது நல்லது. தொடர்ந்து வேர்கடலை எடுத்துகொண்ட அதே அளவில் பொட்டுக்கடலை எடுத்துகொண்டு வறுக்கவும். இதைத்தொடர்ந்து உளுந்தப் பருப்பை வறுக்கவும். நன்றாக பொன்னிறமாக வரும்வரை வறுக்கவும். உளுந்தப் பருப்பை வறுத்ததும் அதை தனியாக எடுத்துவைத்துகொண்டு, 8 லிருந்து 9 மிளகாய் வத்தலை, உப்பு சேர்த்து வறுக்கவும். இதைத்தொடர்ந்து துருவிய தேங்காய், பூண்டு பற்கள், கருவேப்பில்லை ஆகியவற்றை வறுத்தெடுக்கவும். தற்போது வறுத்து வைத்திருந்த எல்லா பொருட்களின் சூடு தணிந்ததும், மிக்ஸியில் போட்டு அரைக்கவும். தற்போது அரைத்து வைத்த பொடியை கண்ணாடி பாத்திரத்தில் போட்டு வைக்கவும். தேவைப்படும் போது, இந்த பொடியுடன் தண்ணீர் ஊற்றி, தாலித்து கொட்டினால் இன்ஸ்டன்ட் சட்னி ரெடி.