உடல் ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்த மரவள்ளிக்கிழங்கு அடையை தவறாம வீட்டில் செய்து சாப்பிங்க.
தேவையான பொருட்கள்
மரவள்ளிக்கிழங்கு
பச்சரிசி
கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு
காய்ந்த மிளகாய்
இஞ்சி
வெங்காயம்
பூண்டு
கொத்தமல்லித்தழை
எண்ணெய்
உப்பு
செய்முறை
மரவள்ளிக்கிழங்கை துருவிக்கொள்ளவும்;. வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.இஞ்சியை துருவிக்கொள்ளவும்.அரிசி, பருப்பு வகைகளை இரண்டு மணி நேரம் ஊறவைத்து, பின்பு கழுவி வடித்து வைக்கவும்.இதனுடன் இஞ்சி, காய்ந்த மிளகாய், வெங்காயம், பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து கொள்ளவும்.மேலும் இதில் துருவிய மரவள்ளிக்கிழங்கைச் சேர்த்து, அரைத்து கொள்ள வேண்டும். தொடர்ந்து எடுத்து நறுக்கிய கொத்த மல்லித்தழை, உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி அடை சுடுவதுபோல் சுட வேண்டும்.