குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஐஸ்கிரீம் வேண்டாம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் மிகவும் பிடிக்கும். ஜில் என்று இருப்பதால் ரசித்து ருசித்து சாப்பிடுவார்கள். சளி, காய்ச்சல் வந்து விடும் என பெற்றோர்கள் கண்டிப்பதும் உண்டு. பல வகை ஐஸ்கிரீம் உள்ளன. பழங்கள் கொண்டு ஐஸ்கிரீம் செய்யப்படுகிறது. அந்தவகையில் முலாம்பழம் ஐஸ்கிரீம் எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
முலாம்பழம் - 1 சிறியது
ஃப்ரஷ் கிரீம் - 1 கப்
கண்டென்ஸ்ட் மில்க் - 1/2 கப்
செய்முறை
முலாம்பழத்தை 2 துண்டுகளாக வெட்டி, விதைகள் மற்றும் தோலை நீக்கி எடுக்கவும். பின் அதை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் போட்டு அரைக்கவும். 1 பாத்திரத்தில் ஃப்ரெஷ் க்ரீமை நன்றாக அடிக்கவும். அதனுடன் கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து கலக்கவும். இப்போது இதனுடன் முலாம்பழ விழுதை சேர்த்து கலக்கவும். அடுத்ததாக, 1 சிறிய கப்பில் இந்த கலவையை ஊற்றி 6 மணி நேரம் ஃபிரிஜ்ஜில் வைக்கவும். பிறகு அதை எடுத்து நட்ஸ்கள் சேர்த்து அலங்கரித்து பரிமாறவும். முலாம்பழம், ரத்த அழுத்தத்திற்கு நல்லது. இதில் உள்ள பொட்டாசியம் செரிமானத்தை ஊக்குவிக்கிறது. சருமத்திற்கு நல்லது.