Advertisment

நவராத்திரி ஸ்பெஷல்: ரெபிசி 2; பட்டாணி சுண்டல்

நவராத்திரி ஸ்பெஷல் ரெசிபி வரிசையில் அம்மனுக்கு ஸ்பெஷலாக பிரசாதம் செய்ய பட்டாணி சுண்டல் ரெசிபியை செய்து பாருங்க.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நவராத்திரி ஸ்பெஷல்: ரெபிசி 2; பட்டாணி சுண்டல்

நவராத்திரி ஸ்பெஷல் ரெசிபி வரிசையில் அம்மனுக்கு ஸ்பெஷலாக பிரசாதம் செய்ய பட்டாணி சுண்டல் ரெசிபியை செய்து பாருங்க.

Advertisment

தேவையான பொருட்கள்

பட்டாணி (பச்சை அல்லது வெள்ளை) – 1/2 கப்

வெங்காயம் – 1

பச்சை மிளகாய் – 2

துருவிய மாங்காய் – 1/2 கப்

துருவிய காரட் – 1/2 கப்

துருவிய தேங்காய் – 1/2 கப்

கொத்தமல்லி இலை, பொடியாக நறுக்கியது – 1/4 கப்

உப்பு தேவைக்கேற்ப

எண்ணெய் – 1 மேஜைக்கரண்டி

கடுகு – 1/2 தேக்கரண்டி

உளுந்து – 1 தேக்கரண்டி

கருவேப்பிலை – 1 ஆர்க்கு

பெருங்காயம் – 2 சிட்டிகை

செய்முறை:

முதலில் பட்டாணியை முதல் நாள் இரவே போதிய அளவு தண்ணீரில் ஊற வைக்கவும். மறுநாள், அத்தண்ணீரை வடித்துவிட்டு, போதுமான அளவு வேறு தண்ணீர் சேர்த்து, உப்பும் சேர்த்து, 4 விசில்கள் வேக விடவும். வெங்காயத்தையும், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்கவும். மற்ற பொருட்களை தயாராக வைக்கவும். வாணலியில் எண்ணெய் சூடாக்கி, கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து, பெருங்காயம், கருவேப்பிலை சேர்க்கவும். வெங்காயம், பட்டாணி, மற்றும் மற்ற பொருட்களான தேங்காய், மாங்காய், கேரட் என அனைத்தையும் சேர்த்து வதக்கவும். இரண்டு நிமிடங்கள் வதக்கிய பின் சூடாகப் பரிமாறலாம்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment