புட்டரி மற்றும் தேங்காய் வைத்து செய்யும் இந்த தோசையை ஈசியா செய்துடலாம்.
தேவையான பொருட்கள்
புட்டரிசி- அரை கப்
தேங்காய்- துருவியது கால் மூடி
வெல்லம் – கால் கப்
எண்ணெய் :
செய்முறை: அரிசியைக் கழுவி அரை மணி நேரம் ஊறவிட்டு நீரை வடித்து விடவும். வெல்லத்தை 2 டீஸ்பூன் நீர் விட்டு சூடு செய்தி இறக்கி வடிகட்டவும். மிக்ஸியில் அரிசியையும் தேங்காயையும் போட்டு நீர் தெளித்து மையாக அரைக்கவும். பின்னர் அதில் வெல்லத்தை வடிகட்டி சேர்த்து, தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். ஒரு மணி நேரம் கழித்து சூடான தோசைக் கல்லில் சிறு தோசைகளாக ஊற்றி எண்ணெய்விட்டு, அடிபக்கம் வெந்ததும் திருப்பி விட்டு ஓரிரு நிமிடங்களில் எடுத்து விடவும்.