சால்னா என்று சொன்னாலே அதை நாம் ரோட்டு கடையில்தான் சாப்பிடுவோம். அப்படியே வீட்டில் தோசை அல்லது சப்பாத்தி சுட்டாலோ ’கடையில் போயி கொஞ்சம் சால்ன வாங்கிட்டு வாங்க’ என்போம். ஆனால் நாம் வீட்டிலேயே அதே சுவையில் சால்னா செய்ய முடியும் அதை பற்றிய தொகுப்புத்தான் இது.
ஒரு பாத்திரத்தில் முந்திரி பருப்பு, கசகசா ஆகியவற்றை சேர்த்து சுடு தண்ணீர் ஊற்றி 15 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். ஒரு மிக்சியில் துருவிய தேங்காய், சின்ன வெங்காயம் , சோம்பு, ஊற வைத்திருந்த பொருட்களை தண்ணீரோடு ஊற்றி அரைத்துக் கொள்ளவும். மேலும் இந்த கலவையை நைசாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
தொடர்ந்து ஒரு குக்கரில், எண்ணெய் ஊற்றி காய்ந்த பட்டை, ஏலக்காய், கல்பாசி, கிராம்பு, பிரியாணி இலை, நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும். வெங்காயம் நிறம் மாரியதும் இஞ்சி-பூண்டு விழுது சேர்க்கவும்.
இதில் பச்சை வாசனை போனதும், தக்காளி, மஞ்சள் தூள் , மிளகாய் தூள், மல்லித்தூள், சிக்கன் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். அதிலிருந்து எண்ணெய் பிரிந்து வர வேண்டும். தொடர்ந்து கொத்த மல்லி, புதினா சேர்த்து கிளரவும். தற்போது நைசாக அரைத்து வைத்த கலவையை இதில் சேர்த்து கொதிக்க வைக்கவும். தற்போது குக்குரை மூடி ஒரு விசில் விட்டு எடுத்தால், சுவையான சால்னா ரெடி