பருத்தி பாலில் அதிக நன்மைகள் இருக்கிறது. கர்ப்பிணி பெண்கள், மாதவிடாய் காலங்களிலும் குடிக்கலாம். மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். இந்நிலையில் அதன் ரெசிபி இதோ
தேவையான பொருட்கள்
பச்சரிசி
கருப்பு பருத்தி விதை
தேங்காய்
ஏலக்காய்
முந்திரி
சுக்கு
கருப்பட்டி
செய்முறை
6 மணிநேரம் தண்ணீரில் ஊற வைத்த பருத்திவிதையை, மிக்ஸியில் அரைத்து பால் எடுக்கவும். பச்சரிசியையும் மிக்ஸியில் ரவை பதத்திற்கு பொடித்துக்கொள்ளவும். கருப்பட்டியை நன்றாக பொடித்து அதில் தண்ணீர் விட்டு கரையும் வரை காய்ச்சி வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். தேங்காய் பாலும் எடுத்துக்கொள்ளவும்.
பாத்திரம் ஒன்றில் 6 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். அதில் பொடித்து வைத்துள்ள அரிசியை போட்டு சிறிதுநேரம் வேகவிட வேண்டும். அரிசி வெந்தவுடன், குறைந்த வெப்பத்தில் அடுப்பை வைத்து, பருத்திப்பாலை ஊற்றி நன்றாக கொதிக்கவிட வேண்டும்.