Advertisment

அரிசி, வேர்க்கடலை, அவல்... ஒரு முறை இப்படி தோசை சுட்டுப் பாருங்க!

குழந்தைகளுக்கு அரோக்கியமாகவும், அதேவேளையில் சமைப்பதற்கு எளிமையாக இருக்கும் இந்த தோசையை வீட்டில் செய்து பாருங்கள். இட்லி அரிசியுடன் வேர்கடலை, அவல் சேர்த்து இந்த மாவு செய்யப்படுவதால் இது மிகவும் ஆரோக்கியமானது.

author-image
WebDesk
New Update
அரிசி, வேர்க்கடலை, அவல்... ஒரு முறை இப்படி தோசை சுட்டுப் பாருங்க!

குழந்தைகளுக்கு அரோக்கியமாகவும், அதேவேளையில் சமைப்பதற்கு எளிமையாக இருக்கும் இந்த தோசையை வீட்டில் செய்து பாருங்கள். இட்லி அரிசியுடன்  வேர்கடலை, அவல் சேர்த்து இந்த மாவு செய்யப்படுவதால் இது மிகவும் ஆரோக்கியமானது.

Advertisment

தேவையான பொருட்கள்

சாப்பாட்டு அரிசி அல்லது இட்லி அரிசி – 2 கப், வறுக்காத பச்சை வேர்கடலை – 1 கப், அவல் – 1 கப்

செய்முறை

இந்த மூன்று பொருட்களையும் தனித்தனியாக ஊற வைக்க வேண்டும். அரிசியும் வேர்க்கடலையும் குறைந்தது 4 முதல் 5 மணி நேரம் ஊற வேண்டும். அரைப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பு அவல் ஊற வைத்துக்கொள்ளுங்கள்

ஊறிய இந்த மூன்று பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு தோசை மாவு பதத்திற்கு அரைத்து ஒரு கிண்ணத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். இதில் தேவையான அளவு உப்பு போட்டு.நன்றாக கரைத்து  8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும். இட்லி மாவு புளிக்க வைப்பதுபோல் புலிக்க வைக்க வேண்டும்.

அடுத்த நாள் இந்த மாவு நன்றாக பொங்கி மேலே எழும்பி வந்திருக்கும். ஒரு கரண்டியை வைத்து நன்றாக கலந்து தோசை கல்லில் தோசை வார்த்தால் சூப்பரான வேர்கடலை தோசை தயார். இதை ரொம்பவும் மெலிசாக வார்க்க முடியாது. ஓரளவுக்கு தடியாக தேய்த்துக் கொள்ளுங்கள். கல் தோசை போல. ஆனால் சோடா உப்பு  போடாமலேயே இந்த தோசை அவ்வளவு மிருதுவாக கிடைக்கும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment