அண்ணாசிப்பழம் மற்றும் பாதாம் சேர்த்து செய்யும் இந்த அல்வாவை வீட்டில் கண்ப்பாக சமைத்து பாருங்க.
தேவையான பொருட்கள்:
பாதாம்- 250 கிராம்
நெய்- 150 கிராம்
முந்திரி-15 கிராம்
அண்ணாசிப் பழம்- 250 கிராம்
சர்க்கரை : 125 கிராம்
இடித்த ஏலக்காய்: ¼ டேபிள் ஸ்பூன்
பால் கோவா: 150 கிராம்
செய்முறை:
அண்ணாசி பழத்தை நன்றாக கழுவி வெட்டிக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி மிதமான தீயில் வைக்க வேண்டும். நறுக்கிய அண்ணாச்சி பழங்களை வதக்க வேண்டும். அண்ணாச்சி பழத்தில் இருக்கும் ஈரதன்மை போன பிறகு. பாதாமை கொதிக்கும் தண்ணீரில் போட்டு தோல் நீக்கவும். தொடர்ந்து அதை அரைத்து கொள்ளவும். தற்போது இந்த கலவையை வதக்கி கொண்டுருக்கும் அண்ணாச்சிப் பழ கலவையில் சேர்க்கவும். தொடர்ந்து சர்க்கரை சேர்க்கவும். தொடர்ந்து பால் கோவாவை சேர்க்கவும். தொடர்ந்து கிளரவும். தற்போது அல்வா பதம் வரும் போது அடுப்பை அணைத்து விடுங்கள். பரிமாறும் பொது, நறுக்கிய பாதாமை சேர்க்கலாம்.