இந்நிலையில் முடி உதிர்வதை பற்றி நாம் அதிகம் கவலைப்படுவோம். மற்றும் சருமத்தின் ஆரோக்கியம் குறித்தும் வருத்தம் கொள்வோம். இந்நிலையில் இதற்காக விலை உயர்ந்த ஷாம்பூ, க்ரீம் ஆகியவற்றை பயன்படுத்துவோம். இந்நிலையில் இதனால் எந்த கூடுதல் பலனும் இல்லை.
ப்ரீ ராடிகல்ஸால் (free radicals) நமது ஆரோக்கியமான செல்கள் தாக்கப்படுகிறது. இதனால் வீக்கம், சீக்கிரமாக வயதாவது, கேன்சர், இதய நோய் வரும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் ஆண்டி ஆக்ஸிடண்ட் நிறைந்த உணவுகளை, நாம் சாப்பிட வேண்டும். இதனால் ஆரோக்கியமான செல்கள் தாக்கப்படுவது தடைபடுகிறது.
பிஸ்தாவில் அதிக ஆண்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது. இதுபோல புளூ பெரிஸ், மாதுளை பழம், செரிஸ் ஆகியவற்றிலும் ஆண்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது. பிஸ்தாவில் அதிக பாலிபினால்ஸ் இருக்கிறது. மேலும் இதில் வைட்டமின் இ இருக்கிறது.
கூடுதலாக இதில் பையோட்டின் இருக்கிறது. இந்த பையோட்டின் சத்துதான் கூந்தல் வளரவும், அதன் வேர்கள் வலுப்பெறவும் உதவுகிறது. மேலும் இதில் இருக்கும் வைட்டமின் இ சீக்கரமாக வயதாவதை தடுக்கிறது.
இந்நிலயில் தினமும் 5 முதல் 8 பிஸ்தா பருப்புகளை நாம் சாப்பிட வேண்டும். தொடர்ந்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.