Advertisment

பகல் 11 மணி, மாலை 5 மணி... மாதுளை இப்படி சாப்பிட்டால் சுகர், பி.பி கவலையே இல்லை!

மாதுளை பழம் பற்றிய உண்மையான நன்மைகள் நமக்கு தெரிவதில்லை. மாதுளையை உடைத்து சாப்பிடுவதற்கு அலுப்பாக இருந்தாலும், இதில் இருக்கும் நன்மைகளை தெரிந்தால், நீங்களே ஆச்சரியம் அடைவீர்கள். இதில் ஆன்டி ஆக்ஸிடண்ட், ஃபிலாப்பிநாய்ட் (flavonoids) உள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பகல் 11 மணி, மாலை 5 மணி... மாதுளை இப்படி சாப்பிட்டால் சுகர், பி.பி கவலையே இல்லை!

மாதுளை பழம் பற்றிய உண்மையான நன்மைகள் நமக்கு தெரிவதில்லை. மாதுளையை உடைத்து சாப்பிடுவதற்கு அலுப்பாக இருந்தாலும், இதில் இருக்கும் நன்மைகளை தெரிந்தால், நீங்களே ஆச்சரியம் அடைவீர்கள். இதில் ஆன்டி ஆக்ஸிடண்ட், ஃபிலாப்பிநாய்ட் (flavonoids) உள்ளது. உடலில் உள்ள பல்வேறு நோய்களில் இருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறதும். மேலும் வாழ்வியல் தொடர்பான குறைபாடுகளை குறைக்க உதவுகிறது. இதில் வைட்டமின் ஏ, சி இருக்கிறது. இரு உணவு இடைவேளைக்கு நடுவில் உங்களுக்கு பசித்தால் இது ஒரு நல்ல ஸ்நாக்காக இருக்கும்.

Advertisment

இதில் இருக்கும் நார்சத்து உடலுக்கு அதிக நன்மை தரும் என்பதால் இதன் விதைகளையும் நன்றாக மென்று சாப்பிடுங்கள். ரத்த ஓட்டத்தை சீராக்கும். வயதாவதை தடுக்கும். மேலும் இதயத்தில் உள்ள ரத்த குழாய்களை, கொழுப்பால் அடைபடுவதை தடுக்கும். கொலஸ்ட்ரால் உள்ள 51 பேரிடம் நடத்திய ஆய்வில், மாதுளை எண்ணெய்யை 4 வாரங்கள் அவர்கள் எடுத்துக்கொண்டபோது கொலஸ்ட்ரால் அளவு குறைந்துள்ளது.

இது பூஞ்சை தொற்று மற்றும் பாக்டீரியாவிற்கு எதிராக செயல்படும் என்பதால், வாய் பகுதியின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. உடல் சோர்வு ஏற்டாமல் தடுக்கும் என்று கூறப்படுகிறது. செல்களின் செயல்பட்டுகளைகூட இது ஊக்குவிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

காலை உணவை சாப்பிட்ட பின்பு உங்களுக்கு பசியெடுத்தால், நீங்கள் மாதுளை சாப்பிடலாம். மாலை வேளையிலும் நீங்கள் சாப்பிடலாம். மேலும் ஜீஸ் செய்து குடிப்பதைவிட முழு பழத்தை சாப்பிட கற்றுக்கொள்ள வேண்டும்.  

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment