Advertisment

10 நிமிடத்தில் ஈசியா செய்யலாம்…சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த பூண்டு குழம்பு

வழக்கமாக வைக்கும் சாம்பார், ரசத்தால் ஒரு வித சலிப்பு ஏற்பட்டிருக்கும். எதாவது வித்யாசமான குழம்பு செய்யலாம் என்று தோன்றினாலும் அதற்கு செலவாகும் நேரம் நினைத்து, அதை செய்யமாட்டோம். இதனால் 10 நிமிடங்களில் ஈசியாக செய்யும் பூண்டு குழம்பு எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
10 நிமிடத்தில் ஈசியா செய்யலாம்…சுவையும் ஆரோக்கியமும் நிறைந்த பூண்டு குழம்பு

வழக்கமாக வைக்கும் சாம்பார், ரசத்தால் ஒரு வித சலிப்பு ஏற்பட்டிருக்கும். எதாவது வித்யாசமான குழம்பு செய்யலாம் என்று தோன்றினாலும் அதற்கு செலவாகும் நேரம் நினைத்து, அதை செய்யமாட்டோம். இதனால் 10 நிமிடங்களில் ஈசியாக செய்யும் பூண்டு குழம்பு எப்படி செய்வது என்பதை தெரிந்துகொள்ளலாம்.  

Advertisment

தேவையான பொருட்கள்

பூண்டு – 20 பல், 

சின்ன வெங்காயம் – 10

நாட்டுத் தக்காளி – 3

 மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்

 பச்சை மிளகாய் – 3

மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்

 மல்லித்தூள்– 1 ½ டீஸ்பூன்

 மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்

புளி – ஒரு சிறிய உருண்டை

கடுகு –  1 டீஸ்பூன்

 காய்ந்த மிளகாய் – 2

 கறிவேப்பிலை – ஒரு கொத்து

வெந்தயம் – ½ டீஸ்பூன்

வெல்லத்தூள் – 1 ஸ்பூன்

நல்லெண்ணெய்

உப்பு – 1 ஸ்பூன்

கொத்தமல்லி – ஒரு கொத்து.

செய்முறை:

முதலில் எலுமிச்சை அளவு புளியை தண்ணீரில் ஊறவைத்து, கொஞ்சம் கெட்டியான புளிக்கரைசலாக கரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோலை நீக்க வேண்டும். அதன் பிறகு தக்காளியை மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒன்றும் பாதியுமாக அரைத்து வைக்க வேண்டும்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, ஒரு பாத்திரத்தை வைக்க வேண்டும். பாத்திரம் நன்றாக சூடானதும் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் கடுகு மற்றும் வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு இவற்றுடன் பூண்டை சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும்.

பின்னர் இவற்றுடன் சின்ன வெங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். பிறகு அரைத்து வைத்துள்ள தக்காளி, பச்சை மிளகாய் இவற்றை சேர்த்து நன்றாக வதக்கி விட

 வேண்டும். பிறகு இவற்றுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விட்டு, தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

இவற்றில் மிளகாய்த்தூள் வாசனை சென்றதும் கரைத்து வைத்துள்ள புளியை சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். இறுதியாக ஒரு கொத்து கொத்தமல்லி சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு, அடுப்பை அனைத்து விட வேண்டும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment