சர்க்கைரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எப்போதும் சாப்பிடும் உணவில் கவனமாக இருக்க வேண்டும். இனிப்பு நிறைந்த பழங்களை தவிர்ப்பது, சக்கரை, மைதா மாவு, பதப்படுத்தப்பட்ட உணவை தவிர்ப்பது என்று பல கட்டுபாடுகள் நிலவுகிறது. இதே நேரத்தில் ஒரே வகையான உணவுகளை நிரிழிவு நோயாளிகள் சாப்பிடக்கூடாது. இது சலிப்பை உருவாக்குவதோடு, மேலும் மன அழுத்தத்தை கூட்டும்.
கீரை, வெந்தயக் கீரை என்று நம் உணவில் சேர்த்துகொள்வோம். இந்நிலையில் அமரந்த் கீரையையும் நாம் உணவில் சேர்த்துகொள்ளலாம். இதனால் அதிக நன்மைகள் நமக்கு கிடைக்கும்.
சக்கரையில் இருக்கும் அதிக கொழுப்பு சத்தை இது குறைக்க உதவுகிறது. இதில் இருக்கும் வைட்டமின் இ ரத்ததில் உள்ள கொழுப்பு சத்தை குறைக்கிறது. டைப் 2 சக்கரை நோயால், பாதிக்கப்பட்டவர்கள், ரத்ததில் சக்கரை அளவை குறைக்கிறது. இதில் இருக்கும் புரத சத்து, ரத்தில் இருக்கும் இன்சுலின் அளவை குறைக்கிறது. நமக்கு அதிக பசி ஏற்படாமல் இருப்பதற்கும், அதிகம் சாப்பிடாமல் இருப்பதற்கும் உதவுகிறது.
மேலும் இதில் கால்ஷியம் நிறைந்திருப்பதால், எலும்பு வளர்ச்சியடைய உதவுகிறது. இதில் இருக்கும் இரும்பு சத்து, பாஸ்பரஸ், பொட்டாஷியம், வைட்டமின் சி ஆகியவை இருப்பதால், புற்றுநோய் வராமல் தடுக்கிறது.