Advertisment

ஊற வைத்த ஜவ்வரிசி... சாஃப்ட் மல்லிப்பூ இட்லி இப்படி செய்து பாருங்க!

தென்னிந்தியாவில் உணவுகளில் மிகவும் பிரபலமான உணவாக ஒன்றாக இட்லி உள்ளது. இவற்றுக்கு சூடான சாம்பார், தேங்காய் மற்றும் கார சட்னிகள் அசத்தலாக இருக்கும். மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படும் உணவுகளில் ஒன்றாகவும் இட்லி இருக்கிறது.

author-image
WebDesk
New Update
ஊற வைத்த ஜவ்வரிசி... சாஃப்ட் மல்லிப்பூ இட்லி இப்படி செய்து பாருங்க!

தென்னிந்தியாவில் உணவுகளில் மிகவும் பிரபலமான உணவாக ஒன்றாக இட்லி உள்ளது. இவற்றுக்கு சூடான சாம்பார், தேங்காய் மற்றும் கார சட்னிகள் அசத்தலாக இருக்கும். மேலும், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பப்படும் உணவுகளில் ஒன்றாகவும் இட்லி இருக்கிறது.

Advertisment

கலோரிகள் மிகவும் குறைவாக காணப்படும் இந்த அருமையான உணவை தயார் செய்ய பலர் சிரம படுகிறார்கள். ஆனால், அவற்றை நாம் எளிதில் தயார் செய்து விடலாம். அப்படி பஞ்சு போன்ற சாஃப்ட் இட்லியை தயார் செய்ய உங்களுக்காவே சில சிம்பிள் டிப்ஸ்களை இங்கு வழங்கியுள்ளோம்.

முதலில் அரிசியை தண்ணீரில் 4 மணி நேரம் ஊற வைக்கவும். உளுந்தை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஆனால் வெந்தயம் மற்றும் சோயா பீன்ஸ் சுமார் 8 மணி நேரம் வரை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.

எல்லா பொருட்களும் சரியான அளவு தண்ணீரில் ஊறிய பின்னர், முதலில் சோயாபீன்சையும் வெந்தயத்தையும் கிரைண்டரில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் புசுபுசுவென அரைத்துக்கொள்ளவும். தேவைப்பட்டால் ஒரு ஸ்பூன் அல்லது இரண்டு ஸ்பூன் தண்ணீர் தெளிக்கலாம்.

பின்னர் ஊற வைத்த உளுந்தம் பருப்பை தண்ணீரை வடித்து விட்டு கிரைண்டரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

இவற்றுடன், முன்னர் அரைத்து வைத்துள்ள சோயாபீன்ஸ் – வெந்தய மாவை சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக ஸ்பூனில் தண்ணீரை ஊற்றி பொங்க பொங்க உளுந்தை ஆட்டி தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

தொடர்ந்து அரிசியைப் போட்டு அரைத்துக்கொள்ளவும். இவற்றை, நைசாகவே ஆட்டி அரைத்து வைத்திருக்கும் உளுந்து மாவோடு சேர்த்து, உங்கள் கையைக் கொண்டு தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கரைத்து ஒரு மூடி போட்டு மூடவும். அப்படியே மாவு ஆறிலிருந்து ஏழு மணி நேரம் நன்றாக புளிக்கட்டும்.

புளித்து வந்த மாவை கரண்டியை கொண்டு நன்றாக கலந்து கொள்ளவும். அதன் பிறகு வழக்கம் போல் இட்லி தட்டில் மாவை ஊற்றி, நன்றாக வேக வைத்து எடுக்கவும்.

தொடர்ந்து இத்துடன் ஜவ்வரிசியை சேர்த்து ஊற வைத்து அரைத்துகொள்ளலாம். வேண்டும் என்றால் வெந்தயத்தையும் சேர்த்துகொள்ளலாம். இப்படி சேர்ப்பதால் இட்லி மேலும் சாஃப்டாக வரும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment