/indian-express-tamil/media/media_files/2025/05/10/kSepAEEACQeygb8pcfMD.jpg)
இரும்புச்சத்து மற்றும் பல்வேறு வைட்டமின்கள் நிறைந்த ஒரு அற்புதமான உணவு முருங்கைகீரை. இந்த சத்தான கீரையை வைத்து செய்யப்படும் சட்னி, இட்லி, தோசை, ஊத்தப்பம் போன்ற காலை உணவு வகைகளுக்கு ஒரு அருமையான பக்க உணவாக அமைகிறது. இந்தச் சட்னியை எளிமையாகச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
முருங்கைக் கீரை (ஆய்ந்தது): 1 கப்
சின்ன வெங்காயம்: 4-5
காய்ந்த மிளகாய்: 3-4 (காரத்திற்கேற்ப)
புளி: சிறு நெல்லிக்காய் அளவு
எண்ணெய்: 2 டீஸ்பூன்
உப்பு: தேவையான அளவு
கொத்தமல்லி இலை: சிறிதளவு
கறிவேப்பிலை: சிறிது
சீரகம், மல்லி – தலா 2 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் சின்ன வெங்காயம், சேர்த்து வதக்கி, சுத்தம் செய்த முருங்கைக் கீரையைச் சேர்த்து, கீரை சுருங்கும் வரை நன்றாக வதக்கவும்.
அதன்பிறகு சீரகம், மல்லி, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை புளி சேர்த்து வதக்கி இந்தக் கலவையை நன்கு ஆற விடவும். ஆறிய பிறகு, இதனை மிக்ஸியில் தேவையான அளவு உப்பு மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து, சட்னி பதத்தில் அரைத்து எடுத்தால் சுவையான முருங்கைகீரை சட்னி ரெடி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us