இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்சினை நீரிழிவு நோய். உடலில் சர்க்கரையின் அளவு சமநிலை தவறும்போது இந்நோய் ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்த பல்வேறு மருத்துவங்கள் இருந்தாலும், உணவுமுறையில் மாற்றம் கொண்டு வரவேண்டியது அவசியம்.
அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள புதிய ஆராய்ச்சியின் முடிவுகளின் படி, மிதமான அளவு பால் பொருட்கள், பால் மற்றும் சீஸ் போன்றவை வகை 2 நீரிழிவு நோயிலிருந்து பாதுகாக்கும் முக்கிய பொருளாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், மிதமான அளவு மீன் மற்றும் முட்டைகளை சாப்பிட பரிந்துரைக்கின்றனர்.
டைப் 2 என்பது நீரிழிவு நோயின் மிகவும் பொதுவான வடிவமாகும், இது கணையத்தால் போதுமான அளவு இன்சுலின் உற்பத்தி செய்ய முடியாதபோது அல்லது இன்சுலின் சரியாக வேலை செய்யாதபோது உருவாகிறது. நீரிழிவு நோய்க்கான முக்கிய ஆபத்து காரணி உடல் பருமன் என்றும், வரும் ஆண்டுகளில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.
நீரிழிவு நோயாளிகளுக்கான உணவு முறைகள் அனைத்தும் தவறானதா?
முழு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், ஆலிவ் எண்ணெய் போன்ற குறிப்பிட்ட தாவர அடிப்படையிலான உணவுகளை உண்பதில் கவனம் செலுத்துவதைத் தடுப்பதற்கு தற்போதுள்ள உணவு வழிகாட்டுதல்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. இதில் பெரும்பாலான விலங்கு பொருட்களின் நுகர்வுகளை கட்டுப்படுத்தவும் ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
இறைச்சி ஏன் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்?
சிவப்பு இறைச்சியில் மாட்டிறைச்சி, ஆட்டு இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி ஆகியவை அடங்கும், வெள்ளை இறைச்சியில் கோழி மற்றும் வான்கோழி ஆகியவை அடங்கும். பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் பன்றி இறைச்சி, தொத்திறைச்சி மற்றும் டெலி இறைச்சி போன்ற பொருட்கள் அடங்கும். ஒரு நாளைக்கு 100 கிராம் மொத்த இறைச்சியை (20%), ஒரு நாளைக்கு 100 கிராம் சிவப்பு இறைச்சி (22%) மற்றும் 50 கிராம்/நாள் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் (30%) உட்கொள்ளும் மக்களிடையே நீரிழிவு நோய் ஆபத்து "கணிசமான" அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், 50 கிராம் / நாள் வெள்ளை இறைச்சி சிறிய ஆபத்து அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
"பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் நைட்ரைட்டுகள் மற்றும் சோடியம் ஆகியவை உள்ளன, இது மற்ற பாதகமான விளைவுகளுடன், கணையத்தின் இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை சேதப்படுத்தும் என்று டாக்டர் ஜியோசுவே கூறியுள்ளார். இதனுடன் "ஒப்பிடுகையில், வெள்ளை இறைச்சியில் குறைந்த கொழுப்பு உள்ளடக்கம், மிகவும் சாதகமான கொழுப்பு அமிலம் மற்றும் குறைந்த அளவு ஹீம் இரும்பு உள்ளது.
இதற்கு நேர்மாறாக, பால் உணவுகள் நீரிழிவு நோய்க்கு எதிராக பாதுகாப்பை ஏற்படுத்தியுள்ளதா கூறப்படுகிறது. தினமும் 200 எம்எல் பால் உணவில் சேர்த்துக்கொள்ளும்பொது நீரிழிவு அபாயத்தில் 10-சதவீதம் குறைவதாக கூறப்படுகிறது. தயிர் நீரிழிவு அபாயத்தை ஆறு சதவீதம் குறைக்க உதவுகிறது. பாலாடைக்கட்டி மற்றும் முழு கொழுப்பு பால் ஆகியவை நீரிழிவு நோய் ஆபத்தின் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று ஆய்வு முடிவு கூறுகிறது.
"பால் பொருட்களில் ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் பிற உயிர்வேதியியல் சேர்மங்கள் நிறைந்துள்ளன, அவை குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கலாம். பாலில் உள்ள மோர் புரதங்கள் சாப்பிட்ட பிறகு இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதை மாற்றியமைப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம் புரோபயாடிக்குகள் குளுக்கோஸ் வளர்சிதை மாற்றத்தில் நன்மை பயக்கும் விளைவுகளை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது.
முழு கொழுப்புள்ள பால் பொருட்களை விட குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் அதிக நன்மை பயக்கும் என்று முடிவுகள் தெரிவிக்கின்றன "உலகளவில் உணவு தொடர்பான இறப்புகளுக்கு வகை 2 நீரிழிவு நோய் முக்கிய காரணங்களில் ஒன்றாகும். அறிவியல் சான்றுகளின் விரிவான ஆய்வு, மிதமான அளவுகளில் பால் உணவுகளை வழக்கமாக உட்கொள்வது, குறிப்பாக குறைந்த கொழுப்பு பொருட்கள், பால் மற்றும் தயிர் எடுத்தக்கொள்வது டைப் 2 நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்க எதவும் என்று கூறப்பட்டுள்ளது. "சிவப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை குறைவாக உண்ண வேண்டும். இதற்கு மிதமான அளவு மீன் மற்றும் முட்டைகள் நல்ல மாற்றாக இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.