Advertisment

சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு இந்த பவுடர்... சுகர் பேஷண்ட்ஸ் நோட் பண்ணுங்க!

Tamil Health Update : கெட்ட கொலஸ்ட்ரால் (எல்டிஎல்) அளவைக் குறைத்து நல்ல கொழுப்பை (எச்டிஎல்) அதிகரிப்பதால், கொலஸ்ட்ராலை நிர்வகிக்க உதவும் சிறுகுறிஞ்சான் இலைகள், பொடியை பயன்படுத்தலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு இந்த பவுடர்... சுகர் பேஷண்ட்ஸ் நோட் பண்ணுங்க!

Tamil Health Food Update For Diabetes Patients : இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் சந்திக்கும் முக்கிய பிரச்சினை நீரிழிவு நோய். உடல் ரத்தத்தில் சர்க்கரை அளவு சமநிலை தவறும்போது இந்நோய் ஏற்படுகிறது. இது ஒரு குணப்படுத்த முடியாத நோய், இந்நோய் தாக்கம் உள்ளவர்கள் வாழ்நாள் முழுவதும் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

Advertisment

மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையே சர்க்கரை நோய் வருவதற்கு முக்கிய காரணம். எனவே, இந்த நோயிலிருந்து தங்களைத் பாதுகாக்க ஒருவர் தங்கள் உண மற்றும் வாழ்க்கை முறையை நன்கு கவனித்துக் கொள்ள வேண்டும். இது தவிர, இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உங்கள் உணவில் சிறுகுறிஞ்சான் சேர்த்துக் கொள்ளலாம், இது நீண்ட காலத்திற்கு உதவும்.

சிறுகுறிஞ்சான் இலைகள் மருத்துவ பயணத்தின் ஒரு பகுதியாக உள்ளது.  இது வகை 1 மற்றும் வகை 2 நீரிழிவு நோய்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. உடலில் இன்சுலின் அளவை அதிகரிப்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. மேலும், கெட்ட கொலஸ்ட்ரால் (எல்டிஎல்) அளவைக் குறைத்து நல்ல கொழுப்பை (எச்டிஎல்) அதிகரிப்பதால், கொலஸ்ட்ராலை நிர்வகிக்க உதவும் சிறுகுறிஞ்சான் இலைகள், பொடியை பயன்படுத்தலாம்.

இரத்த சர்க்கரை நோயாளிகளுக்கு சிறுகுறிஞ்சான் நன்மைகள்

சிறுகுறிஞ்சானில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன, அவை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். இதனுடன், இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து கணைய செல்களைப் பாதுகாக்கிறது மற்றும் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது, இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது.

ஒரு நீரிழிவு நோயாளி சிறுகுறிஞ்சான் எப்படி உட்கொள்ள வேண்டும்?

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, வெறும் வயிற்றில் சில சிறுகுறிஞ்சான் இலைகளை மென்று சாப்பிட வேண்டும். அதன் பிறகு ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்கவும். இந்த செயல்முறை உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல், நாள் முழுவதும், அதை சாதாரணமாக பராமரிக்கும். உங்கள் மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு அரை மணி நேரத்திற்கு முன் நீங்கள் சிறுகுறிஞ்சான் பவுடரை ஒரு கிளாஸ் தண்ணீருடன் உட்கொள்ளலாம். அதிக நன்மைகள் தரும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Healthy Life Healthy Food
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment