உடல் எவ்வளவு தான் ஆரோக்கியமாக இருந்தாலும் ஒருசிலர் அவ்வப்போது மலச்சிக்கல் பிரச்சினையை சந்தித்து வருவது தொடர்ந்து வருகிறது. நீங்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு, மருந்துகளை உட்கொள்வதில் சோர்வாக இருந்தால் அல்லது வீட்டு வைத்தியம் மூலம் களைப்பாக இருந்தால், மலச்சிக்கலை சமாளிப்பதற்கான ஒரு ஆயுர்வேத ஆரோக்கிய வழி உள்ளது.
ஒரே இடத்தில் அதிக நேரம் உட்கார்ந்து வேலை செய்வதாலும், உடல் உழைப்பு இல்லாததாலும், மலச்சிக்கல் பிரச்சனை அதிகரித்து வருகிறது. நீங்களும் இதே போன்ற பிரச்சனையை எதிர்கொண்டால், இந்த பிரச்சனையிலிருந்து விடுபட வெந்நீர் மற்றும் நெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்வதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால், நெய்யின் நன்மைகளைப் படித்து, அது உங்களுக்கு எவ்வாறு உதவும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
நெய் மற்றும் வெந்நீர் எப்படி மலச்சிக்கலை போக்குகிறது?
நெய் நமது செரிமான மண்டலத்தை உயவூட்டுகிறது, இதனால் குடல் இயக்கம் எளிதாக முடியும். மேலும், சூடான நீரில் கலக்கும்போது, அது உங்கள் திடமான மலத்தை மென்மையாக்கும். இது தவிர, உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றவும் சூடான தண்ணீர் உதவும். இது பற்றிய கூடுதல் தகவல்களைப் நிபுணர் ஒருவர் கூறுகிறார்.
மலச்சிக்கலைப் போக்க நெய் மற்றும் வெந்நீரின் நன்மைகள்
ஆயுர்வேத சுகாதார பயிற்சியாளரும் பிராணா ஹெல்த்கேர் சென்டரின் நிறுவனருமான டிம்பிள் ஜங்தா கூறுகையில், “நெய் நம் உடலை உயவூட்டுவதோடு குடலைச் சுத்தப்படுத்தவும் உதவுகிறது. இது கழிவுகளின் சுழற்சியை மேம்படுத்துகிறது மற்றும் மலச்சிக்கல் அபாயத்தை குறைக்கிறது.
ஒரு ஆய்வின்படி, நெய் பியூட்ரிக் அமிலத்தின் வளமான மூலமாகும். பியூட்ரிக் அமிலத்தின் நுகர்வு குடல் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது மற்றும் மலத்தின் இயக்கத்திற்கு உதவுகிறது என்றும் ஆய்வு கூறுகிறது. அதே நேரத்தில், இது வயிற்று வலி, வீக்கம் மற்றும் மலச்சிக்கலின் பிற அறிகுறிகளையும் குறைக்கிறது.
நெய் சிறந்த இயற்கை மலமிளக்கியாகும். இதனுடன், எடை குறைப்பு, நல்ல தூக்கம் உட்பட எலும்பு வலிமையை அதிகரிப்பது போன்ற பல விஷயங்களில் இது உதவும்.
நெய் மற்றும் வெந்நீரை உட்கொள்ள சரியான வழி என்ன?
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் நெய்யை கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். தண்ணீர் அதிகம் சூடாகாமல் பார்த்துக் கொண்டு தினமும் அருந்தலாம். செரிமானப் பாதை, குடல் மற்றும் பெருங்குடல் - கடினமாகவும் வறண்டதாகவும் மாறும் போது மலச்சிக்கல் ஏற்படுகிறது. நெய்யின் மசகு பண்புகள் அமைப்பை மென்மையாக்க உதவுகின்றன மற்றும் உடலில் இருந்து கழிவுகளை எளிதாக அகற்ற உதவுகின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.