Advertisment

நீங்க வாங்குன மாம்பழம் தண்ணீரில் மிதக்குதா? உஷார்... இப்படி பார்த்து வாங்குங்க!

Tamil Food Update : மாம்பழம் சாப்பிடும் ஆசையில், பழம் நன்றாக பழுத்ததா இல்லையா என்பதை பார்க்க தவறி விடுகிறோம்.

author-image
WebDesk
New Update
நீங்க வாங்குன மாம்பழம் தண்ணீரில் மிதக்குதா? உஷார்... இப்படி பார்த்து வாங்குங்க!

கோடைகாலம் என்றவுடன் கடுமையான வெயில் நினைவுக்கு வந்தாலும், பெரும்பாலனோருக்கு மாம்பழம் தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த இந்த பழம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் உள்ளது.

Advertisment

ஆனால் மாம்பழம் வாங்கும்போது அதை நல்லமுறையில் பார்த்து வாங்குவது அவசியம். சிலர் மாம்பழம் சாப்பிடும் ஆசையில் அதை நன்றாக பார்த்து வாங்காமல் பெரிய சிரமத்தை எதிர்கொள்வதை பார்த்திருப்போம்.

மேலும் மாம்பழம் சாப்பிடும் ஆசையில், பழம் நன்றாக பழுத்ததா இல்லையா என்பதை பார்க்க தவறி விடுகிறோம். முன்பெல்லாம் விவசாயிகள் மாம்பழத்தை மரத்திலேயே பழுக்கவிட்டு பறிப்பார்கள் அல்லது காயாக பறித்து தனி அறையில் வைத்து பழம் பழுக்கும் வரை காத்திருந்து விற்பனைக்கு அனுப்புவார்கள்.

பொதுவாக மாம்பழத்தில் இயற்கையாகவே சுரக்கும் எத்திலின் என்ன ரசாயனம், மூலம் தான் பழங்கள் பழுக்கிறது. ஆனால் இப்போதெல்லாம் பழத்தை எளிதில் பழுக்க வைக்க பலவகையான ரசாயன பொருட்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

இப்படி செயற்கையாக பழுக்கவைக்கப்பட்ட பழத்தை சாப்பிடும்போது தையராய், நீரிழிவு நோய், கருப்பை பிரச்சினை, புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய் தாக்குதலுக்கு உள்ளாகும் வாய்ப்புள்ளது. தாய்பாலூட்டும் தாய்மார்கள் மாம்பழத்தை தவிர்ப்பது மிகவும் நல்லது.

ஆனால் மாம்பழம் செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டதா என்பதை கண்டறிய சில சோதனைகள் உள்ளது.

மாம்பழம் வாங்கி வந்தவுடன் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் மாம்பழத்தை மூழ்கடித்து பாருங்கள். மாம்பழம் தண்ணீருக்கு அடியில் சென்றால் இயற்கை முறையில் பழுத்த மாம்பழம். மாறாக தண்ணீரில் மிதந்தால், இது செயற்கையாக பழுக்கவைக்கப்பட்டது.

மாம்பழத்தை பார்க்கும்போது அதன் தோல்களில் ஆங்காங்கே பச்சை நிறமாக இருந்தால் அது செயற்கையாக பழுக்கவைக்கப்பட்ட மாம்பழம். இயற்கையில் பழுத்த பழத்தில் பச்சை நிறம் இருக்க வாய்ப்பில்லை.

இயற்கையாக பழுத்த மாம்பழத்தின் சதைப்பகுதி பளீர் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில்இருக்கும். செயற்கையான பழத்தில் வெளிர் மஞ்சள் அல்லது அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

முக்கியமாக செயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தின் சதைப்பகுதி கெட்டியாக இருக்கும். ஆனால் இயற்கையாக பழுத்த மாம்பழத்தின் சதைப்பகுதி கொழக்கொழவென இருக்கும். மேலும் சதைப்பகுதி தோலில் ஒட்டாமல் இருக்கும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Healthy Food Tamil News 2 Tamil Health Tips
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment