உங்களுக்கு சுத்தமாக சமைக்கவே தெரியாது என்றாலும், உங்கள் வீட்டில் தேங்காய் இருந்தால் போதும், 5 நிமிடத்தில் சுவையான தேங்காய் துவையல் தயார் செய்துவிடலாம். இதற்கு நீங்கள் யாரையும் எதிர்பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. இனி வீட்டில் யாருமே இல்லை, சமையல் செய்ய தெரியாது என்றால் உடனே உங்கள் கிச்சனுக்கு சென்று இந்த தேங்காய் துவையலை செய்யுங்கள். இது இட்லி, தோசை, ஊத்தப்பம் என எல்லா டிஃபனுக்கு பர்ஃபெக்ட் காம்பினேஷனாக இருக்கும். சுடசுட சாதத்தில் கொஞ்சம் நெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி, இந்த தேங்காய் துவையல் வைத்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.
Advertisment
இங்கு தேங்காய் துவையல் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!
தேவையான பொருட்கள்
¾ கப்- புதிய தேங்காய்
3 டீஸ்பூன்- உளுத்தம் பருப்பு
6-8 சிவப்பு மிளகாய்
2 தேக்கரண்டி- எண்ணெய்
பெருங்காயம்- ஒரு சிட்டிகை
ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளி
தேவையான அளவு உப்பு
எப்படி செய்வது?
முதலில் அடுப்பில் கடாய் வைத்து, 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், உளுத்தம் பருப்பு, புளி, சிவப்பு மிளகாய் மற்றும் பெருங்காயம் சேர்க்கவும். பருப்பு பொன்னிறமாகும் வரை வறுக்கவும். தீயை அணைத்து, இதனுடன் தேங்காய் சேர்க்கவும். அது குளிர்ந்தம் உப்பு சேர்த்து, மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக விழுதாக அரைக்கவும். அவ்வளவுதான். சுவையான தேங்காய் துவையல் தயார்.
தோசை, இட்லி, சூடு சாதம் எல்லாவற்றுக்கும் இது பர்ஃபெக்ட் காம்பினேஷனாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“