கறிக் குழம்பு வாசம்... எல்லா டிபனுக்கும் பெஸ்ட்!

தேவையான பொருட்கள்

தக்காளி - 500 கிராம், வெங்காயம் - 150 கிராம், பச்சை மிளகாய் - 2-3, இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், மல்லி தூள் - 2 டீஸ்பூன், சோம்பு - 1/2 டீஸ்பூன், கரம் மசாலா - 1/2 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, தேங்காய் பால் - 1/4 கப் (விருப்பப்பட்டால்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

தக்காளியை நன்கு கொதிக்க வைத்து, தோல் உரித்து, மிக்ஸியில் நைஸாக அரைத்துக்கொள்ளவும்.

அதேபோல், தேங்காய், முந்திரி, சோம்பு, சீரகம் ஆகியவற்றை சேர்த்து நைஸாக அரைத்து தனியாக வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, சோம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்

பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.

அரைத்து வைத்த தக்காளி விழுதை சேர்த்து, எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு வதக்கவும்.

அரைத்த தேங்காய் விழுது, உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் அல்லது கரம் மசாலா சேர்த்து, நன்கு கொதிக்க விடவும்.

கொத்தமல்லி தழை தூவி...

இறுதியாக, தக்காளி குருமா சிக்கன் குருமா சுவையில் இருக்க கொத்தமல்லி தழை தூவி, சூடாக இட்லி, தோசை, சப்பாத்தி, சாதத்துடன் பரிமாறவும்.

மேலும் அறிய