ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்தால் ரத்த சோகை ஏற்படும். இந்நிலையில் இந்த ரத்த சோகை நோய் ஏற்பட்டால், ஆரோக்கியம் மோசமாகி அதிக நோய்கள் ஏற்படும்.
இதனால் தான் கர்ப்பிணி பெண்கள், மற்ற சத்துக்களைவிட கூடுதலாக இரும்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இதனால் நாம் கருப்பு கொண்டக்கடலை சாப்பிட வேண்டும்.
கருப்பு கொண்டக்கடலையை கப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைக்கும் பால் கொடுக்கும் தாய்மார்களும் சாப்பிடலாம். இதில் அதிக நார்சத்து இருப்பதால், குடல் ஆரோக்கியத்திற்கும், சர்க்கரை நோய் உள்ளவர்கள் எடுத்துகொள்ளலாம்.
இதில் தாவர வகை புரத சத்து இருப்பதால், கூந்தல் உதிராது. இதை வைத்து ஒரு சூப்பர் ரெசிபியை தெரிந்துகொள்வோம்.
தேவையான பொருட்கள்
அவித்த கருப்பு கொண்டக்கடலை
தக்காளி நறுக்கியது
வெள்ளரிக்காய் நறுக்கியது
குடைமிளகாய் நறுக்கியது
எலுமிச்சை
சாட் மசாலா
செய்முறை ஒரு பாத்திரத்தில் இவை அனைத்தையும் சேர்த்து எலுமிச்சை புரிந்து, சாட் மசாலா சேர்த்து சாப்பிடவும்.