தோசை பலருக்கும் பிடித்த உணவு. நம் வீடுகளில் பெரும்பாலும் இட்லி, தோசை செய்து சாப்பிடுவோம். வெறும் அரிசி மாவில் செய்வதை விட சத்து நிறைந்ததாக செய்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் நல்லது. அந்த வகையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் வகையில் தூதுவளை தோசை எப்படி செய்வது என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
தூதுவளை கீரை - ½ கப் இட்லி
அரிசி - 1 கப்
உளுந்து - ¼ கப்
வெந்தயம் - ½ டீஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
செய்முறை
அரிசி, உளுந்து, வெந்தயம் மூன்றையும் 2 முதல் 3 மணி நேரம் ஊற வைக்கவும். பின் தண்ணீரை வடிகட்டி இஞ்சி, மிளகாய், தூதுவளை கீரை சேர்த்து தோசை மாவு பதத்துக்கு அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் மாவுக் கலவையுடன் உப்பு சேர்த்து வழக்கம் போல புளிக்க வைக்க வேண்டும். இப்போது தூதுவளை தோசை மாவு தயார்.
தோசைக் கல் வைத்து இந்த மாவு ஊற்றி சுட்டு எடுக்கலாம். இரவு உணவு, காலை உணவில் தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிடலாம். தூதுவளை எலும்பு, பற்களை வலுப்படுத்தும். சளி, இருமலுக்கு நல்ல மருந்தாக செயல்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil