ரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுதல் போலவே குறைவதும் ஆபத்தானது. இந்நிலையில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த சர்க்கரை அளவு திடீர் குறையும் ஆபத்தை கடந்து செல்வார்கள்.
இதை மருத்துவ மொழியில் ஹைப்போக்ளைசீமியா என்று அழைப்பார்கள். 70 mg/dl அல்லது 3.9 mmol/L அளவுக்குக் கீழ் ரத்த குளுக்கோஸ் செல்லும் போது இந்த நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில் சர்க்கரை அளவு குறைந்தால் படபடப்பு, நடுக்கம், பதற்றம், அதிக பசி ஆகிய அறிகுறிகள் ஏற்படும். இந்நிலையில் சர்க்கரை நோய் பாதிப்பு உடையவர்கள், சரியான நேரத்தில் உணவு ஏடுத்துக்கொள்ளாமல் இருந்தாலோ, மாத்திரை சாப்பிட்ட பின் உணவு சாப்பிட மறந்தாலும் இந்த நிலை ஏற்படும். இந்நிலையில் ரத்த சர்க்கரை அளவு குறையும் அறிகுறிகள் தென்பட்டால் குளுக்கோஸ் பொடியை தண்ணீரில் கலந்து குடிக்கலாம். 15 கிராம் குளுகோஸ் பொடியை தண்ணீரில் கந்து குடிக்கலாம். அப்போதும் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கவில்லை என்றால் மீண்டும் இதை செய்ய வேண்டும்.
மேலும் சர்க்கரையை தண்ணீரில் கலந்தும் அந்த தண்ணீரை எடுத்துகொள்ளலாம். மேலும் சாக்லேட் அல்லது மிட்டாய் வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும்.