உளுந்து வடை அல்லது மெது வடை என்பது தமிழர்களுக்கு உயிர் என்று சொன்னால் மிகையில்லை. வட மாநிலத்தவர்கள் கூட தமிழகத்திற்கு வந்தால் விரும்பி சாப்பிடுவது இந்த உளுந்து வடைதான். ஆனால் ஒரு உளுந்து வடையை செய்வதற்கு 4 மணி நேரமாவது எடுத்துக்கொள்ளும். இதனால் நாம் மெது வடையை வீட்டில் செய்வதில்லை. ஆனால் ஊறவைத்து அரைகாமலேயே சுவையான மெது வடையை செய்ய முடியும். இதோ அதன் ரெசிபியை உங்களுடன் பகிர்கிறோம்.
தேவையான பொருட்கள்
பச்சை மிளகாய்
இஞ்சி
சமையல் சோடா
உப்பு
கொத்தமல்லி
ரவை
தயிர்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் ரவையை சேர்க்க வேண்டும். மேலும் அத்துடன் தயிர் சேர்த்து கலந்து. வடை பதத்திற்கு கொண்டு வர வேண்டும். இதை 15 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். தற்போது அதில் பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, உப்பு, சமையல் சோடா, சேர்த்து பிசைந்து கலந்துகொள்ளுங்கள். தற்போது வழக்கம்போல், எண்ணெய் சூடாக்கி அதில் வடை தட்டி போட்டு பொறித்து எடுக்கவும்.