பல வகை உடல் பிரச்சனைக்கு வாழைப்பூ ஒரு தீர்வாக இருக்கும். வாழைப்பூ வைத்து எப்படி வடை செய்வது என்பதை பார்ப்போம்
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு
வாழைப்பூ
வெங்காயம்
பச்ச மிளகாய்
மிளகாய்
பூண்டு பல்
கருவேப்பிலை
கொத்த மல்லி
எண்ணெய்
செய்முறை
கடலை பருப்பை இரண்டு மணி நேரம் ஊறவைக்க வேண்டும் . இந்த தண்ணீரில் வத்தல் மிளகாய் சேர்த்துக்கொள்ள வேண்டும். இந்நிலையில் வாழைப்புக்களை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் போட வேண்டும் அந்த பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம், கொத்த மல்லி, பச்சை மிளகாய் ஆகியவற்றை எடுத்துகொள்ள வேண்டும். தற்போது இதை நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து மிக்ஸி ஜாரில் ஊறவைத்த பருப்பு, மிளகாய், பூண்டு ஆகியவற்றை அரைத்துக் கொள்ள வேண்டு.
இந்த இரண்டு கலவையை கையில் பசைந்து வடை போல் தட்டிக்கொள்ள வேண்டும். எண்ணெய்யில் போட்டு பொறித்தெடுத்தால் வடை ரெடி .