Advertisment

சிப்ஸ் அள்ளி சாப்பிடுறீங்களா? உயிரிழக்கும் அபாயத்தில் நீங்களும் இருக்கலாம்: இதுதான் காரணம்

500 கோடி மக்கள், டிரான்ஸ் கொழுப்பு சத்தை உட்கொள்வதால் பாதிக்கப்பட்டு இதய நோய் மற்றும் மரணம் வரை ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
சிப்ஸ் அள்ளி சாப்பிடுறீங்களா? உயிரிழக்கும் அபாயத்தில் நீங்களும் இருக்கலாம்: இதுதான் காரணம்

500 கோடி மக்கள், டிரான்ஸ் கொழுப்பு சத்தை உட்கொள்வதால் பாதிக்கப்பட்டு இதய நோய் மற்றும் மரணம் வரை ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

Advertisment

டிராஸ் கொழுப்பு சத்தை எடுத்துகொள்வதில் கனம் தேவை என்ற கருத்தை கடந்த 2018-ம் ஆண்டு முதல் தற்போது வரை உலக சுகாதார நிறுவனம் பிரகடனப்படுத்தி வருகிறது. உலகம் முழுவதில் உள்ள 200 கோடி மக்கள் இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்பட்டு வாழ்க்கை முறையை மாற்றி உள்ளனர்.

ஆனால் உலகம் முழுவதிலும் உள்ள 500 கோடி மக்கள் இந்த கொழுப்பு சத்தை உண்டு கொண்டு அபாய நிலையில் உள்ளனர. டிராஸ் கொழுப்பு சத்தில் எந்த பலனும் இல்லை இதனால் ஆரோக்கியத்திற்கு கேடு ஏற்படுகிறது.

16 நாடுகளில், இரத்த குழாய் அடைப்பால் ஏற்படும் இதய நோய் அதிகரித்திருப்பதற்கு டிரான்ஸ் கொழுப்பு சத்துதான் காரணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த டிராஸ் கொழுப்பு சத்து பேக் செய்யப்பட்ட உணவுகள். பேக் செய்யபட்ட பண்டங்கள், சமைக்கும் எண்ணெய் மற்றும் பிரட்டுக்கு பயனப்டுத்தும் ஸ்பிரெட்ஸ்-ல் இருக்கிறது. இதனால் நீங்கள் சிப்ஸ் உள்ளிட்ட பொருட்களை வாங்கும்போது, அது உங்களுக்கு இதய நோய் மற்றும் திடீர் மரணம் வரை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆரோக்கியமான சமையல் எண்ணெய்யை பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும். மேலும் முடிந்தவரை வீட்டிலேயே சமைத்த உணவை சாப்பிட பழக வேண்டும்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment