மத்திய பிரதேச மாநிலம் போபாலில், 10 வயது சிறுமியை தொடர்ச்சியாக 3 மாதங்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக 65 வயது முதியவரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறப்பட்டதாவது, 5 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 65 வயது முதியவர் ஒருவரும், அவருக்கு தெரிந்த மற்ற இருவரும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன் அச்சிறுமி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தனக்கு நேர்ந்தவற்றை தன் தாயிடம் சொல்லியிருக்கிறார் அச்சிறுமி.
இதன்பின், அச்சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில், சம்பந்தப்பட்ட மூவரையும் போலீசார் கைது செய்தனர்.