Advertisment

காதலுக்கு வயதில்லை: 13 வயது சிறுவனை மணந்துக் கொண்ட 23 வயது பெண்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
காதலுக்கு வயதில்லை: 13 வயது சிறுவனை மணந்துக் கொண்ட 23 வயது பெண்!

ஆந்திராவில்  23 வயது பெண் ஒருவர், 13 வயது சிறுவனை காதலித்து திருமணம்  செய்துக் கொண்ட நிகழ்வு  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

காதலுக்கு வயதில்லை  என்பார்கள். ஆனால் ஆந்திராவில் நடந்த இந்த திருமணத்தை பற்றி  கேள்விப்பட்டவர்கள் எல்லோரும் காதலுக்கு அறிவுக் கூடவா இல்லை? என்று  புலம்பி தள்ளி வருகின்றனர்.  ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தை சேர்ந்த 23 இளம் பெண் தனது தாய் மாமாவாகிய (தாயின் தம்பி)  13 வயது சிறுவனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.

13  வயது சிறுவன் மைனர் என்பதை அறிந்தும், இரு வீட்டார் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைப்பெறுள்ளது.  சிறுவனின் அக்கா மகளான அந்த 23 வயது பெண்,  சிறுவனை தனக்கு மணம் முடித்து தரவில்லை என்றால் தற்கொலை செய்துக்  கொள்ளுவதாகவும் குடும்பத்தாரை மிரட்டியுள்ளார்.

இந்நிலையில் தான் ,  வேறு வழியின்றி இரு வீட்டாரும் கடந்த  மாதம் 27 ஆம் தேதி வீட்டிலியே வைத்து இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். அதன் பின்பு, இவர்களின் திருமண புகைப்படம் சமூகவலைத்தளங்களில் பரவி தற்போது ஊடக கவனத்தையும் பெற்றுள்ளது. இந்த திருமணம் குறித்து கேள்விப்பட்ட சமூக ஆர்வலர்கள் பலர்,  இந்த திருமணம் சட்டப்படி செல்லாது என்றும், உடனே சிறுவனை மீட்டு, திருமணம் செய்து வைத்த பெற்றோர்களை கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில், ஏற்கனவே இதுப்போன்ற நிகழ்வு  நடந்து, காவல் துறையினர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் மற்றொரு சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

 

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment