Advertisment

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மூன்று பேர்

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை, இருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மூன்று பேர்

உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியை, இருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இதுகுறித்து காவல் துறை தரப்பில் கூறப்பட்டதாவது,

லக்னோவை சேர்ந்த அச்சிறுமி, மார்க்கெட் பகுதியில் நின்றுகொண்டிருந்தபோது, அவருக்கு தெரிந்த நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு வீட்டில் சேர்ப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால், வீட்டுக்கு போகாமல் வேறொரு இடத்துக்கு அழைத்துச் சென்று தன் நண்பருடன் இணைந்து இரவு சுமார் 11 மணிவரை அச்சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.

இதன்பின் அச்சிறுமியை சாலையோரத்தில் விட்டுவிட்டு சென்றுள்ளனர். இதையடுத்து, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர், அச்சிறுமியிடம் நடந்தவற்றை கேட்டுள்ளார். ஆனால், அச்சிறுமிக்கு உதவி செய்வதற்கு பதிலாக அவரும் பாலியல் பலாத்காரம் செய்ததாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து, சாலையோரத்தில் அச்சிறுமி படுத்திருந்ததைக் கண்ட அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும், இருவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment