Advertisment

கடந்த முறை பா.ஜ.க தோற்ற எம்.பி தொகுதிகளில் தீவிர கவனம்: மத்திய அமைச்சர்களுக்கு அமித்ஷா உத்தரவு

மே 25 முதல் ஜூலை 31 வரை சாவடி வலுப்படுத்தும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.பி தொகுதிகளுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

author-image
WebDesk
New Update
BJP

BJP ministers to visit seats lost in 2019

2019 தேர்தலில் பாஜக வெற்றி பெற முடியாத நாடு முழுவதும் உள்ள 140க்கும் மேற்பட்ட எம்.பி தொகுதிகளை பார்வையிடுமாறு பாஜக தனது மத்திய அமைச்சர்களை புதன்கிழமை கேட்டுக் கொண்டுள்ளது.

Advertisment

நரேந்திர மோடி அரசின் 8 ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நடைபெறும் இந்த அவுட்ரீச் பயிற்சியின் போது அமைச்சர்கள் தங்கள் தேர்தல் பணிகளைத் தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மே 25 முதல் ஜூலை 31 வரை சாவடி வலுப்படுத்தும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.பி தொகுதிகளுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு எம்.பி.க்கும், ஒரு குறிப்பிட்ட தொகுதியில் 100 பலவீனமான சாவடிகள் ஒதுக்கப்படும், 30 கட்சித் தொண்டர்களின் உதவியுடன் பூத் பலப்படுத்தும் நடவடிக்கைகளை கண்காணிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். அதேநேரம், ஒவ்வொரு கட்சி எம்.எல்.ஏ.வும் 10 கட்சித் தொண்டர்களால் கவனிக்கப்படும் 25 சாவடிகளில் செயல்பாடுகளைக் கண்காணிக்க வேண்டும்.

“இதனால், செயல்பாடுகள் மற்றும் உறுப்பினர்களின் அடிப்படையில் குறைந்தது 77,800 சாவடிகள் பலப்படுத்தப்படுவதைக் கட்சி பார்க்கும். கட்சி பெரிய அளவில் விரிவாக்கத் திட்டங்களில் ஈடுபட வேண்டிய மாநிலங்களில், நான்கு தலைவர்களைக் கொண்ட சிறப்புக் குழு பொறுப்பேற்க வேண்டும்” என்று ஒரு வட்டாரம் தெரிவித்தது.

கட்சித் தலைமையகத்தில் மத்திய அமைச்சர்களுடனான சந்திப்பின் போது, ​​மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா இருவரும் 2024 தேர்தலுக்கு முன்னதாக மக்களைத் தொடர்பு கொள்ளும் திட்டங்களைத் தீவிரப்படுத்துமாறு வலியுறுத்தினர்.

கூட்டத்தில் அரசின் எட்டாவது ஆண்டு விழா நிகழ்ச்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

அவற்றில் மிக முக்கியமானது ஏழை மற்றும் நலிந்த பிரிவினருக்கான நலத்திட்டங்களை "திறம்பட செயல்படுத்துவது" பற்றி மக்களுடன் தொடர்புகொள்வது. வரவிருக்கும் தேர்தல்களிலும் கட்சியானது’ பெண்கள் மற்றும் அரசின் திட்டங்களின் பயனாளிகளை குறிவைக்கும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

பணவீக்க அழுத்தத்தைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் முன்முயற்சிகளை விளக்க’ அமைச்சர்கள் பல செய்தியாளர் சந்திப்புகள் மற்றும் பிரச்சார நிகழ்ச்சிகளை நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது. கோதுமை மற்றும் சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துதல் போன்ற பிற நடவடிக்கைகள் மூலம், அரசாங்கம் முக்கிய கவலையான விலை உயர்வுக்கு தீர்வு கண்டுள்ளது என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Bjp
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment