Advertisment

தனியாருக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகளில் 50%-த்தை பெற்ற 9 மருத்துவமனைகள்; சமநிலை எங்கே?

இரண்டாம் நிலை நகரங்கள், டவுன்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு தடுப்பூசிகள் கிடைக்கவில்லை.

author-image
WebDesk
New Update
9 pvt hospitals corner 50% doses

 Tabassum Barnagarwala

Advertisment

9 pvt hospitals corner 50% doses : தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகளில் 50%த்தை 9 மருத்துவமனை குழுமங்கள் பெற்றிருப்பது தடுப்பூசி பகிர்வில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை பிரதிபலிப்பதோடு கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

தடுப்பூசிகளுக்கு திறந்தவெளி சந்தைகளை மத்திய அரசு அறிவித்து 1 மாதம் நிறைவடைந்த நிலையில், தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட 1.20 கோடி தடுப்பூசிகளில் கிட்டத்தட்ட 60.75 லட்சம் தடுப்பூசிகளை இந்த 9 கார்ப்பரேட் மருத்துவமனைகள் பெற்றுள்ளன.

மீதம் இருக்கும் 50% மருந்துகளை 300க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் வாங்கியுள்ளன. அவற்றில் பெரும்பாலான மருத்துவமனைகள் நகர்ப்புறங்களில் மட்டுமே அமைந்துள்ளன. இரண்டாம் நிலை நகரங்களில் இருந்து வெகு குறைவான மருத்துவமனைகளே தடுப்பூசிகளை பெற்றுள்ளன.

மே 1ம் தேதியில் இருந்து தடுப்பூசி உற்பத்தியாளர்களிடம் இருந்து தனியார் நிறுவனங்கள் நேரடியாக 50% தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியிருந்தது. 45-க்கும் மேற்பட்ட வயதினருக்கு தடுப்பூசி போடுவதற்காக மாநிலங்களுக்கு விநியோகிக்க, மே 1 முதல் உற்பத்தியில் 50 சதவீதத்தை வாங்குவதில் அது தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டது.

9 pvt hospitals corner 50% doses

தனியார் மருத்துவமனைகளால் வாங்கப்பட்ட தடுப்பூசிகளின் அளவு மே மாதத்தில் 1.20 கோடியாக இருந்தது. இது மொத்த கொள்முதலான 7.94 கோடி தடுப்பூசிகளில் 15.6% ஆகும். இதில் 22 லட்சம் தடுப்பூசிகளை மட்டுமே அவர்கள் செலுத்தியுள்ளனர். மாநிலங்கள் 33.5% (அல்லது 2.66 கோடி) தடுப்பூசிகளை வாங்கியுள்ளது. மத்திய அரசு 50.9 % (அல்லது 4.03 கோடி) தடுப்பூசிகளை கொள்முதல் செய்துள்ளது.

9 pvt hospitals corner 50% doses

முதல் ஒன்பது தனியார் நிறுவனங்கள் அப்பல்லோ மருத்துவமனைகள் (ஒன்பது மருத்துவமனைகள் 16.1 லட்சம் டோஸ்கள்); மேக்ஸ் ஹெல்த்கேர் (ஆறு மருத்துவமனைகள், 12.97 லட்சம் டோஸ்கள்); ரிலையன்ஸ் அறக்கட்டளை நடத்தும் எச்.என் மருத்துவமனை அறக்கட்டளை (9.89 லட்சம் டோஸ்கள்); மெடிகா மருத்துவமனைகள் (6.26 லட்சம் அளவு); ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் (எட்டு மருத்துவமனைகள் 4.48 லட்சம் டோஸ்கள்); கோத்ரேஜ் (3.35 லட்சம் டோஸ்கள்); மணிப்பால் ஹெல்த் (3.24 லட்சம் டோஸ்கள்); நாராயண ஹிருதலயா (2.02 லட்சம் டோஸ்), டெக்னோ இந்தியா டமா (2 லட்சம் டோஸ்).

கொரோனா 3-ம் அலை வருவதற்கு முன்பே தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் சென்னை மாநகராட்சி

இந்த மருத்துவமனைகள் பெரும்பாலும் மெட்ரோக்கள், தலைநகரங்கள் மற்றும் டையர் - 1 நகரங்களில் அமைந்துள்ளன. பாரத் பயோடெக் மற்றும் சீரம் நிறுவனம் மத்திய அரசிடம் ஒரு தடுப்பூசிக்கு ரூ. 150 என்று விலை நிர்ணயம் செய்துள்ள நிலையில், தனியார் மருத்துவமனைகளுக்கு கோவாக்ஸின் விலை ரூ. 1200-க்கும், கோவிஷீல்ட் தடுப்பூசி ரூ. 600க்கும் விற்பனை செய்யப்படுகிறது. உற்பத்தியாளர்கள் தனியார் நிறுவனங்கள் மற்றும் அதிக பேரம் பேசும் திறன் கொண்ட மருத்துவமனைகளுக்கு பங்குகளை விற்க விரும்புகின்றனர் என்று பெங்களூரில் உள்ள தேசிய மேம்பட்ட ஆய்வுக் கழகத்தின் இணை பேராசிரியர் தேஜல் காந்திகர் கூறினார்.

இந்த மருந்துகளை தனியார் மருத்துவமனைகள் ரூ. 850 - 1000 (கோவிஷீல்ட்) என்ற விலைக்கு விற்பனை செய்கின்றனர். அதே நேரத்தில் கோவாக்ஸின் ரூ. 1250க்கு செலுத்தப்படுகிறது. நகரங்களில் வாழும் ஒரு பிரிவினருக்கும் இந்த விலை சரியானதாக இருக்கும். ஆனால் மத்திய வர்க்கத்தினர் மற்றும் ஏழை மக்களுக்கு இந்த விலை கட்டுபடியாகாது. மலிவு விலையை தவிர, மற்ற முக்கிய அம்சம் அணுகலுடன் தொடர்புடையது - இந்த அளவுகள் 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு கூட நகரங்களில் நிர்வகிக்கப்படுகின்றன:

இந்தியன் எக்ஸ்பிரஸ் மே மாதத்தில் தடுப்பூசி விநியோகத்தின் புவியியல் பரவல் (நகர்ப்புற மற்றும் கிராமப்புற) குறித்து மருத்துவமனைகளுக்கு விரிவான கேள்விகளை அனுப்பியது. ஆனால் பதில்கள் இன்னும் கிடைக்கவில்லை. இந்த மருத்துவமனைகள் தடுப்பூசிகளை அவற்றின் சங்கிலி முழுவதும் கொண்டு சென்றிருக்கிறதா, அல்லது கார்ப்பரேட்டுகள், வீட்டுவசதி சங்கங்கள் அல்லது பிற நகரங்களில் உள்ள சிறிய கிளினிக்குகள் ஆகியவற்றுடன் ஒப்பந்தம் செய்து தடுப்பூசிகளை தருகிறதா என்று தெரியவில்லை.

COWIN இணையதளத்தில் தமிழ் மொழி இல்லாததால் தலைவர்கள் கண்டனம்; உடனடியாக பதிலளித்த ஒன்றிய அரசு

மொத்த பங்குகளில் 25 சதவீதத்திற்கும் குறைவாகவே தனியார் துறை வாங்கியுள்ளதாக தரவு காட்டுகிறது. அவற்றின் தற்போதைய தினசரி நோய்த்தடுப்புத் திறனைக் கருத்தில் கொண்டு, பெரும்பாலானவை இன்னும் பதினைந்து நாட்கள் நீடிப்பதற்கு போதுமான விநியோகத்தைக் கொண்டுள்ளன. டிஜிட்டல் பிரிவு கிராமப்புறங்களில் தடுப்பூசிக்கு இடையூறு விளைவிப்பதைக் கவனிக்கும் அதே வேளையில் தடுப்பூசி கொள்கையை மறுபரிசீலனை செய்யுமாறு அது மத்திய அரசை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை கேட்டுக்கொண்டது.

டிஜிட்டல் பிளவுகள் மட்டும் இதற்கு காரணம் கிடையாது. மே மாத கொள்முதல் தரவின் படி. தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்ட தனியார் மருத்துவமனைகள் அனைத்தும் நகர்ப்புறங்களில் அமைந்துள்ளது. அப்பல்லோவின் மருத்துவனைகள் 9 நகரங்களில் அமைந்துள்ளது. வாங்கிய சில பங்குகள் அப்பல்லோ கிளினிக்குகள், அப்பல்லோ ஸ்பெக்ட்ரா மற்றும் அடுக்கு -2 நகரங்களான நாசிக் மற்றும் இந்தூர் போன்ற குழு மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்பட்டன என்று அந்த மருத்துவமனையில் செய்தித் தொடர்பாளர்க் கூறினார். ஆனால் இந்த மருத்துவக்குழு கிராமப்புறங்களில் இல்லை என்று ஒப்புக் கொண்டது.

மேக்ஸ் ஹெல்த்கேர் நிறுவனம் 6 நகரங்களில் இருக்கும் மருத்துவமனைகளுக்காக தடுப்பூசிகளை வாங்கியது. ஃபோர்ட்டிஸ் 8 நகரங்களில் இருக்கும் மருத்துவமனைகளுக்காக வாங்கியது. ஃபோர்ட்டிஸ் மருத்துவமனையின் செய்தி தொடர்பாளர் பேசுகையில், வாங்கப்பட்ட தடுப்பூசிகள் அனைத்தும் முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை நகரங்களில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு வங்கப்பட்டது என்று கூறினார். டெல்லியில் வாங்கப்பட்ட 3 லட்சம் தடுப்பூசிகள் நாட்டில் உள்ள அனைத்து நகரங்களுக்கும் விநியோகிக்கப்பட்டுள்ளது. எச்.என். மும்பை மற்றும் நவி மும்பை பகுதிகளில் மட்டுமே மருத்துவமனைகளை வைத்திருக்கிறது. மெடிக்கா கல்கத்தாவில் ஒரே ஒரு மருத்துவமனையை வைத்துள்ளது.

தேசிய மூலதன மண்டலம் (என்.சி.ஆர்), மும்பை பெருநகர மண்டலம் (எம்.எம்.ஆர்), கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஹைதராபாத் ஆகிய மருத்துவமனைகளில் மே மாதத்தில் மொத்த பங்குகளில் 80 சதவீதம் பங்குகள் உள்ளன என்பது தெளிவாகிறது. 3.22 லட்சம் மக்கள் தொகை கொண்ட கர்நாடகாவின் ஒரு சிறிய நகரமான ஷிமோகாவில் உள்ள ஒரு சிறிய தனியார் மருத்துவமனையான சர்ஜி 6,000 கோவிஷீல்ட் அளவுகளை வாங்கியுள்ளது. ஜல்கானில், விஸ்வப்பிரபா மருத்துவமனை 5,120 டோஸ் வாங்கியது. இது டையர் 3 நகரங்களில் இருக்கும் மருத்துவமனையில் சில ஆயிரம் தடுப்பூசிகளை வாங்க முடியும் என்பதற்கு இவை உதாரணமாக உள்ளது.

பெரிய நகரங்களில் உள்ள பெரிய மருத்துவமனைகள் மற்றும் சிறிய மருத்துவமனைகளுக்கு இடையே சமநிலை அற்ற தன்மை நிலவுகிறது என்பது தெளிவாகிறது. நாங்கள் 30 ஆயிரம் டோஸ்கள் கேட்டிருந்தோம். எங்களுக்கு 3000 டோஸ்களே கிடைத்துள்ளது. வலிமையான வலையமைப்பு கொண்ட மருத்துவமனைகள் உற்பத்தியாளர்களிடம் இருந்து அதிக மருந்துகளை பெற்றுள்ளன என்று மும்பையில் உள்ள ஹிந்து சபா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் வைபவ் தியோகிர்கர் கூறினார்.

சில மருத்துவமனைகள் குறைவான தடுப்பூசிகளை கேட்டு அதிகமான தடுப்பூசிகளை பெற்ற நிகழ்வுகளும் அரங்கேறியுள்ளது. பெங்களூரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைகள் வளாகம் 48,000 கோவிஷீல்ட் டோஸ்களை கேட்டது ஆனால் அவர்களுக்கு 2.90 லட்சம் டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. அதே போன்று டெல்லியில் உள்ள மேக்ஸ் ஹெல்த்கேர் 1 லட்சம் டோஸ்களுக்கு ஒப்பந்தமிட்டது. ஆனால் 2.90 லட்சம் கோவிஷீல்ட்டை பெற்றது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment