Advertisment

புது வகையான தாக்குதல்; ஜம்மு விமானப்படை தளத்தில் வீசப்பட்ட 2 வெடிகுண்டுகள்

ஒரு கட்டிடத்தின் மேற்கூரை சேதம் அடைந்துள்ளது. ஆனால் விமானங்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இந்த தாக்குதலில் மதிப்புமிக்க ஆயுதங்கள் எதுவும் சேதமடையவில்லை.

author-image
WebDesk
New Update
Indian Air Force base in Jammu

Arun Sharma , Man Aman Singh Chhina

Advertisment

Indian Air Force base in Jammu : ஞாயிற்று கிழமை காலை ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் ட்ரோன் மூலம் இரண்டு வெடிகுண்டுகள் கீழே போடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் இது போன்று தாக்குதல் நடைபெறுவது இதுவே முதல்முறை.

அதிகாலை 1.37 மற்றும் 1.42 மணி அளவில் இரண்டு வெடிகுண்டுகள் இவ்வாறு போடப்பட்டு தாக்குதலில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு விமானப்படை அதிகாரிகள் காயம் அடைந்துள்ளனர்.

ஒரு கட்டிடத்தின் மேற்கூரை சேதம் அடைந்துள்ளது. ஆனால் விமானங்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இந்த தாக்குதலில் மதிப்புமிக்க ஆயுதங்கள் எதுவும் சேதமடையவில்லை.

இந்த தாக்குதலை நடத்த சில வான்வழி தளங்கள் பயன்படுத்தப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனாலும் இது ஒரு ட்ரோன் மூலம் தான் நடத்தப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் இருந்ததா என்பது விசாரணைக்குரிய விஷயம் என்று ஒரு அதிகாரி கூறினார்.

இந்த விமானப்படை தளம் பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லையில் இருந்து 14-15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. ஜம்மு பகுதியில் பாகிஸ்தானின் ட்ரோன் இதற்கு முன்பு 12 கி.மீ தூரம் வரை உள்ளே வந்தது குறிப்பிடத்தக்கது. இந்திய எல்லைப் பகுதிக்குள் இருந்து இந்த ட்ரோன் இயக்கப்பட்டிருப்பதற்கான சாத்தியங்களை நிராகரிக்க இயலாது என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க : இந்திய சீன எல்லை விவகாரம் : விரைவான தீர்வுகளுக்காக முன்கூட்டியே பேச்சுவார்த்தையில் ஈடுபட ஒப்புதல்

பயங்கரவாத தாக்குதலை நடத்த ட்ரோன் பயன்படுத்துவது நாட்டிற்கு ஒரு புதிய பாதுகாப்பு அச்சுறுத்தலின் தொடக்கத்தை குறிக்கிறது. ஆயுதமேந்திய ட்ரோன்களின் அச்சுறுத்தல் சில ஆண்டுகளுக்கு முன்பு இந்திய பாதுகாப்பு துறையால் விவாதிக்கப்பட்டது.

இரண்டு தாக்குதல்களில் ஒன்று கட்டிடத்தின் கூரையை சேதமாக்கியுள்ளது. மற்றொன்று தரையில் விழுந்து சேதம் அடைந்தது. வெடிக்கும் சப்தம் ஒரு கி.மீக்கு அப்பால் வரையில் கேட்டதால் இப்பகுதியில் வாழும் மக்கள் பெரும் பீதி அடைந்துள்ளனர். காயமடைந்த இரண்டு விமானப்படை வீரர்களான வாரண்ட் அதிகாரி அரவிந்த் சிங் மற்றும் முன்னணி விமானப்படை எஸ் கே சிங் ஆகியோருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. புலனாய்வு வட்டாரங்கள் மற்றும் அங்கு பணியாற்றும் வீரர்கள் யாரும் ட்ரோன் சப்தத்தை கேட்டதாக தெரிவிக்கவில்லை.

காயமடைந்த ஊழியர்கள் ஒரு குண்டுவெடிப்பைக் கேட்ட பின்னர் அவர்கள் கட்டிடத்திலிருந்து வெளியே வந்ததாகவும், இரண்டாவது குண்டுவெடிப்பில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது என்றும் அவர்கள் கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

5 கிலோ எடை கொண்ட வெடிபொருட்களுடன் லஷ்கர் - இ - தய்பா இயக்கத்தை சேர்ந்த ஒருவர் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சிறிது நேரத்தில் இந்த தாக்குதல் ஏற்பட்டுள்ளது.

ஜம்முவில் கூட்டம் அதிகம் உள்ள பகுதியில் குண்டுவெடிப்பு நடத்த பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பு திட்டமிட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். காவல்துறை கூடுதல் இயக்குநர் ஜெனரல் முகேஷ் சிங், லஷ்கர் செயல்பாட்டாளர் இந்த தாக்குதல் தொடர்பாக விசாரிக்கப்படுவார் என்று கூறினார்.

ஜம்மு காஷ்மீர் தலைவர்களை பிரதமர் மோடி டெல்லியில் சந்தித்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி அன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அங்கீகாரங்கள் ரத்து செய்யப்பட்டதற்கு பிறகு மத்திய அரசு நடத்திய மிக முக்கியமான நடைமுறைகளில் ஒன்றாகும்.

இறுக்கம் தளர்ந்திருக்கலாம் ஆனால் அரசியல்சார் தீர்வுகளுக்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்

ஜம்முவில் நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக வெளியிடப்பட்ட சிறு அறிக்கை ஒன்றில் ட்ரோனின் பயன்பாடு இருப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. இந்திய விமானப்படையின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ஜம்மு விமானப்படை நிலையத்தின் தொழில்நுட்ப பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரண்டு குறை செயல்திறன் கொண்ட இரண்டு வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றதாகவும், ஒன்றில் கட்டிடத்தின் மேற்கூரை சேதம் அடைந்ததாகவும், மற்றொன்று திறந்த வெளியில் வெடித்ததாகவும் அறிவித்துள்ளது. “எந்த உபகரணத்திற்கும் சேதம் ஏற்படவில்லை. சிவில் ஏஜென்சிகளுடன் விசாரணை நடந்து வருகிறது” என்று அந்த ட்விட்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த தாக்குதலின் அனைத்து கோணங்களும் விசாரணைக்கு உட்படுத்தப்படும் என்று அதிகாரி ஒருவர் டெல்லியில் தெரிவித்தார். விமானங்கள் கிளம்பும் இடத்தை இலக்காக கொண்டு இந்த தாக்குதல்கள் நடைபெற்றுள்ளது. ஆனால் அதற்கு அருகே உள்ள கட்டிடம் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளது என்று ஐ.ஏ.எஃப். அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் அருகே உள்ள சர்வதேச எல்லை மற்றும் எல்.ஓ.சி. பகுதிகளில் சமீபத்தில் ஆளில்லா விமானம் மூலமாக ஆயுதங்கள் வெளியேற்றப்பட்ட சம்பவங்கள் சமீபத்தில் நடைபெற்றுள்ளது.

அமெரிக்கா தயாரித்த எம் 4 அரை தானியங்கி கார்பைன், இரண்டு பத்திரிகைகள், 60 சுற்று வெடிமருந்துகள் மற்றும் ஏழு சீன கையெறி குண்டுகளை ஏற்றிச் சென்ற ட்ரோன் கடந்த ஆண்டு ஜூன் 20ம் தேதி அன்று, கத்துவா மாவட்டத்தின் சர்வதேச எல்லையில் உள்ள ரத்துவா பகுதியில் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது.

கடந்த சில மாதங்களாக, ஜம்மு பிரிவில் பல இடங்களில் “பிஐஏ” என்று குறிக்கப்பட்ட விமான வடிவ பலூன்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த பலூன்களில் சில இந்தியாவின் எல்லைக்குள் மிகவும் ஆழமாக பறக்க முடிந்தது. ஜம்மு விமானப்படை நிலையம் மீதான பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் 16 மற்றும் 18 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) மற்றும் தேசிய பாதுகாப்பு காவலர் (என்எஸ்ஜி) குழுக்கள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடந்த இடத்தில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment