நடிகர் நாக சைத்தன்யா மற்றும் நடிகை சமந்தாவுக்கு வெள்ளிக்கிழமை கோவாவில் திருமணம் நடைபெற்றது. மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர். மாலை 3 மணிமுதல் 6 மணிவரை மெஹந்தி நிகழ்வும், இரவு 11.52 மணிக்கு முகூர்த்தமும் நடைபெற்றது. நாகை சைத்தன்யா பட்டு சட்டை மற்றும் வேட்டி அணிந்திருக்க, சமந்தா நாக சைத்தன்யாவின் பாட்டியின் திருமண பட்டுப்புடவையை கட்டியிருந்தார். அப்புடவை சிறப்பாக மெருகேற்றப்பட்டிருந்தது. அவர்களின் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட அற்புத புகைப்படங்களை காணுங்கள்.