Advertisment

உண்மை வெளிவரும் வரை அதானி குறித்து கேள்வி எழுப்புவேன்: ராகுல் காந்தி

சீனப் பொருளாதாரத்தின் அளவு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் சமீபத்திய கருத்துக்கள் “கோழைத்தனம்” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார்

author-image
WebDesk
New Update
உண்மை வெளிவரும் வரை அதானி குறித்து கேள்வி எழுப்புவேன்: ராகுல் காந்தி

சத்தீஸ்கர் மாநிலம் நவ ராய்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் 85வது பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி உரையாற்றினார். (ட்விட்டர்/INCindia)

சத்தீஸ்கரின் நவ ராய்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் 85வது பொதுக்குழு கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசை கடுமையாக சாடினார். மேலும், உண்மை வெளிவரும் வரை கெளதம் அதானி குறித்து தனது கட்சி தொடர்ந்து கேள்விகளை எழுப்பும் என்றும் ராகுல் காந்தி கூறினார்.

Advertisment

அதானி சொத்துக்களை குவிப்பதன் மூலம் ஒட்டுமொத்த நாட்டிற்கும் எதிராக செயல்படுகிறார் என்று ராகுல் காந்தி கூறினார். மேலும், “அதானிக்கும் பிரதமருக்கும் உள்ள தொடர்பு குறித்து நாங்கள் நாடாளுமன்றத்தில் கேட்டபோது, ​​எங்களின் முழுப் பேச்சும் நீக்கப்பட்டது. அதானி குறித்து உண்மை வெளிவரும் வரை ஆயிரக்கணக்கான முறை நாடாளுமன்றத்தில் கேட்போம், நாங்கள் நிறுத்த மாட்டோம்,'' என்றும் அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்: UPA மாடலில் செயல்படுவோம், 3-வது அணி பா.ஜ.கவுக்கும் மட்டுமே உதவும்: எதிர்க்கட்சிகளுக்கு காங். அழைப்பு

மேலும், “அதானியின் நிறுவனம் நாட்டை ‘பாதிக்கிறது’ மற்றும் ‘நாட்டின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பையும் பறிக்கிறது’ என்று நான் சொல்ல விரும்புகிறேன். நாட்டின் சுதந்திரத்திற்கான போர் ஒரு நிறுவனத்திற்கு எதிராக இருந்தது, ஏனெனில் அது அனைத்து செல்வம் மற்றும் துறைமுகங்கள் போன்றவற்றை எடுத்துக்கொண்டது. வரலாறு மீண்டும் மீண்டும் வருகிறது. இது நாட்டிற்கு எதிரான வேலை, அப்படி நடந்தால் ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியும் இதற்கு எதிராக நிற்கும்” என்று ராகுல் காந்தி கூறினார்.

பங்கு விலை கையாளுதல் மற்றும் மோசடி பரிவர்த்தனைகளில் ஈடுபட்டதாக அதானி குழுமத்திற்கு எதிரான அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு கூட்டு நாடாளுமன்றக் குழுவை உறுப்பினர்கள் கோரியதன் விளைவாக, அதானி மீதான சர்ச்சை நாடாளுமன்ற நடவடிக்கைகளில் ஆதிக்கம் செலுத்தி, சபை நடவடிக்கைகள் மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

இதற்கிடையில், சீனப் பொருளாதாரத்தின் அளவு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கரின் சமீபத்திய கருத்துக்கள் “கோழைத்தனம்” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டார், நாடு ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டபோது இந்தியாவின் பொருளாதாரம் பெரிதாக இருந்ததா என்று அமைச்சர் ஜெய்சங்கரிடம் ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.

"இது தேசியவாதம் அல்ல, கோழைத்தனம். உங்களை விட வலிமையானவர் முன் தலைவணங்குவது சாவர்க்கரின் சித்தாந்தம். சீனாவின் பொருளாதாரம் நமது பொருளாதாரத்தை விட அதிகமாக இருப்பதால், அவர்களுடன் நம்மால் போராட முடியாது என்று அமைச்சர் கூறுகிறார். இதுதான் தேசியவாதமா? இது கோழைத்தனம்’’ என்று வயநாடு எம்.பி.யான ராகுல் காந்தி கூறினார்.

பாரத் ஜோடோ யாத்ரா மூலம் மேற்கொள்ளப்படும் "எளிமையை" முன்னெடுத்துச் செல்ல புதிய திட்டத்தை கட்சி வகுக்க வேண்டும் என்றும், முழு நாடுடன் நானும் அதில் பங்கேற்பேன் என்றும் காங்கிரஸ் தலைவர் கூறினார்.

இதற்கிடையில், காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கூறுகையில், ”2024 லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது, ஆனால் காங்கிரஸிடம் தான் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இப்போது எங்களுக்கு இன்னும் ஒரு வருடம் மட்டுமே உள்ளது, எங்களுக்குள் (எதிர்க்கட்சிகள்) நாங்கள் ஒன்றிணைவோம் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. அனைத்து எதிர்கட்சிகளும், (பா.ஜ.க) சித்தாந்தத்தை எதிர்க்கும் மக்களும் ஒன்றுபட்டு போராட வேண்டும். அனைவரிடமிருந்தும் எதிர்பார்ப்புகள் உள்ளன, ஆனால் அதிக எதிர்பார்ப்புகள் காங்கிரஸிடம் இருந்துதான் இருக்கின்றன” என்று கூறினார்.

‘மண்டலா’ மட்டத்தில் இருந்தே காங்கிரஸ் அமைப்பை உருவாக்கி வலுப்படுத்த வேண்டும் என்றும் பிரியங்கா கூறினார்.

கூடுதல் தகவல்கள்: செய்தி நிறுவனங்கள்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Bjp India Rahul Gandhi Congress Gautam Adani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment