Advertisment

நாட்டின் 5 விமான நிலையங்களை இனி பராமரிக்கப் போவது அதானி குழுமம் தான்

மற்ற நிறுவனங்களை விட குறைந்த தொகையை கெளதம் அதானி தலைமையிலான அதானி எண்டெர்பிரைசஸ் நிறுவனம் குறிப்பிட்டிருந்ததால், அத்தனை ஏலங்களும் அவர்களுக்கே வழங்கப்பட்டிருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
gautam adani wins bid to operate 5 airports

மொத்தம் 6 விமான நிலையங்களை பராமரிக்க விடப்பட்ட ஏலத்தில் 5 விமான நிலையங்களை கைப்பற்றியுள்ளது அதானி குழுமம்.

Advertisment

அகமதாபாத், லக்னோ, கெளஹாத்தி, ஜெய்ப்பூர், மங்களூர் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்களின் பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைப்பதாக இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு செய்தது. சமீபத்தில் இதற்கான ஏலம் விடப்பட்டது, இதில் 32 நிறுவனங்கள் பங்கேற்றன.

இதில் கெளஹாத்தி விமான நிலையம் தவிர்த்து, மற்ற 5 விமான நிலையங்களுக்கான ஏலம் விடப்பட்டது. மற்ற நிறுவனங்களை விட குறைந்த தொகையை கெளதம் அதானி தலைமையிலான அதானி எண்டெர்பிரைசஸ் நிறுவனம் குறிப்பிட்டிருந்ததால், அத்தனை ஏலங்களும் அவர்களுக்கே வழங்கப்பட்டிருக்கிறது. இதன்படி வரும் 50 ஆண்டுகளுக்கு, மேற்கூறிய விமான நிலையங்களை அதானி குழுமம் பராமரிக்கும்.

“கேபினெட் அமைச்சர்களுடன் கலந்தாலோசித்த பின்பு, ஏலத்தில் வெற்றி பெற்ற நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்” என இது பற்றி தெரிவித்திருக்கிறார் மூத்த அதிகாரி ஒருவர்.

இருப்பினும் கெளஹாத்தி விமான நிலையத்துக்கான டெண்டர் இன்னும் திறக்கப்படவில்லை.

Gautam Adani
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment