Advertisment

சீனா பிரச்னையை காங்கிரஸ் எழுப்ப காரணமே இதுதான்: அமித்ஷா குற்றச்சாட்டு

சீனாவில் இருந்து ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு கிடைத்த பணம் குறித்த கேள்வியைத் தவிர்க்கவே, தவாங் மோதல் குறித்து கேள்வி எழுப்பி காங்கிரஸ் எம்.பி-க்கள் மக்களவையில் கேள்வி நேரத்தை சீர்குலைத்ததாக மத்திய அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Amit Shah on why Congress raised Tawang clash in LS Tamil News

Union Minister Amit Shah. (File Photo)

Congress raised Tawang clash in LS to avoid question on Rajiv Gandhi Foundation’s FCRA licence: Amit Shah Tamil News: இந்தியா - சீனா இடையே கடந்த சில ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை மீண்டும் தலைதூக்கியுள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜுன் 15ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய - சீன படைகள் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் கிழக்கு லடாக்கின் ரின்சன் லா பகுதியிலும் இருநாட்டு படைகளுக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல்களில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீனா தங்கள் தரப்பில் 4 வீரர்கள் உயிரிழந்ததாக தெரிவித்தது.

Advertisment

இந்நிலையில், தற்போது இந்தியா - சீன படைகள் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. அருணாச்சலபிரதேச எல்லையில் இரு படைகளும் மோதிக்கொண்டுள்ளன. அருணாச்சலபிரதேசத்தின் தவாங் செக்டார் எல்லைப்பகுதியில் இருபடைகளும் கடந்த 9 ஆம் தேதி மோதிக்கொண்டன. இந்த மோதலில் இரு நாட்டு வீரர்களுக்கும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் செக்டார் எல்லைப்பகுதியில் இந்திய மற்றும் சீன ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டதாக எழுந்துள்ள அறிக்கைகள் மீது விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்ததன. இதையடுத்து, சபை நடவடிக்கைகள் மதியம் 12 மணி வரை திடீரென ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், சீனாவில் இருந்து ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு (ஆர்ஜிஎஃப்) கிடைத்த பணம் மற்றும் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் ஜாகிர் நாயக்கின் அமைப்பு குறித்த கேள்வியைத் தவிர்ப்பதற்காக, தவாங்கில் இந்திய-சீன ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் குறித்து கேள்விகளை எழுப்பி காங்கிரஸ் எம்.பி-க்கள் மக்களவையில் கேள்வி நேரத்தை சீர்குலைத்ததாக மத்திய அமைச்சர் அமித் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா, சீனத் தூதரகத்திடம் இருந்து 1 கோடி ரூபாயும், நாயக்கிடம் இருந்து 50 லட்ச ரூபாயும் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு (ஆர்ஜிஎஃப்) பெற்றுக்கொண்டதாகக் கூறினார். தூதரகத்திலிருந்து பணம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்வதாக காங்கிரஸ் கூறும்போது, ​​1962 போரின்போது இந்தியா இழந்த நிலம் குறித்த ஆராய்ச்சியை உள்ளடக்கியதா என்பதை தேசம் அறிய விரும்புகிறது என்றும் அவர் குற்றம் சாட்டி இருக்கிறார்.

“நான் கேள்வி நேர பட்டியலைப் பார்த்தேன், கேள்வி எண் 5 ஐப் பார்த்த பிறகு, (காங்கிரஸின்) கவலையைப் புரிந்துகொண்டேன். ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் (ஆர்ஜிஎஃப்) வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத்தின் (எஃப்சிஆர்ஏ) உரிமம் ரத்து செய்யப்பட்டது தொடர்பான கேள்வி… அவர்கள் அனுமதித்திருந்தால், ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு ரூ.1.35 கோடி நன்கொடை கிடைத்ததாக நாடாளுமன்றத்தில் பதில் அளித்திருப்பேன். 2005-2007ல் சீனத் தூதரகம் வெளியிட்ட எஃப்சிஆர்ஏ-ன் படி இது பொருத்தமற்றது. எனவே விதிகளின்படி, உள்துறை அமைச்சகம் அதன் பதிவை ரத்து செய்தது." என்று அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

மேலும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அருணாச்சல பிரதேச பயணம் குறித்து சீனா கேள்வி எழுப்பியதை சுட்டிக்காட்டிய அமைச்சர் அமித் ஷா , “நான் சொல்ல விரும்புகிறேன், பாஜக ஆளும் நிலத்தில் எந்த விதமான ஆக்கிரமிப்பையும் அனுமதிக்காது. ஒரு அங்குல நிலத்தையும் விடமாட்டோம். ராணுவ வீரர்களின் வீரம் பாராட்டத்தக்கது. அவர்கள் நமது நிலத்தை காப்பாற்றியுள்ளனர்,'' என்று கூறியுள்ளார்.

2010 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் குடியிருப்பாளர்களுக்கு சீனர்கள் காகித விசா வழங்கிய விவகாரத்தையும் மத்திய அமைச்சர் அமித் ஷா எழுப்பி இருந்தார்.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil

India Amit Shah China Congress All India Congress India China War Lok Sabha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment