Advertisment

கல்வி தரத்தை மேற்கோள் காட்டி, அரசு உதவிப்பெறும் பள்ளி, கல்லூரிகளை கையப்படுத்துகிறது ஆந்திர அரசு

Andhra Pradesh cites quality, starts taking over aided schools and colleges: கல்வி தரத்தை சரியாக பராமரிக்கவில்லை; அரசு உதவிப்பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை கையகப்படுத்த ஆந்திர அரசு முடிவு

author-image
WebDesk
New Update
கல்வி தரத்தை மேற்கோள் காட்டி, அரசு உதவிப்பெறும் பள்ளி, கல்லூரிகளை கையப்படுத்துகிறது ஆந்திர அரசு

ஆந்திராவில் அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கான சாலையின் முடிவு இது. 90 சதவீதத்துக்கும் அதிகமான உதவி பெறும் பட்டப்படிப்புக் கல்லூரிகள் அரசால் கையகப்படுத்தப்பட்டு, இனி அரசு நிறுவனங்களாக நடத்தப்படும்.

Advertisment

உதவித்தொகை பெறும் நிறுவனங்கள் மற்றும் அவர்களின் ஊழியர்களை இணைக்கும் செயல்முறை கல்லூரி கல்வி ஆணையர் மற்றும் பள்ளிக் கல்வி இயக்குநரால் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

கல்வி அமைச்சர் ஆதிமூலபு சுரேஷ், உதவித்தொகை பெறும் நிறுவனங்களால் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட பணியாளர்கள் மீண்டும் தேவைக்கேற்ப கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பணியமர்த்தப்படுவார்கள் என்று கூறினார்.

உதவித்தொகையில் இருந்து தானாக முன்வந்து திரும்பப் பெறுதல்; அவர்களின் சொத்துக்களை அரசாங்கத்திடம் ஒப்படைத்தல்; அல்லது நிறுவனங்களை தனியார் அமைப்புகளாக நடத்துதல் என இந்த நிறுவனங்களுக்கு அரசாங்கம் மூன்று விருப்பங்களை அளித்தது என்று அமைச்சர் சுரேஷ் தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.

பல நிறுவனங்கள் தங்கள் உதவித்தொகை நிலையை கைவிட்டு தங்கள் ஊழியர்களை ஒப்படைத்துள்ளன, அதே நேரத்தில் ஒரு சிலர் தங்கள் சொத்துகளையும் விட்டுக்கொடுக்க ஒப்புக்கொண்டனர், இந்த விருப்பங்களில் எதையும் ஏற்காத நிறுவனங்கள் தங்கள் அங்கீகாரத்தை இழக்கும் என அமைச்சர் கூறினார்.

"மாணவர்களின் குடும்பத்திற்கு சுமை இல்லாமல் தரமான கல்வியை வழங்குவதே அரசின் நோக்கம். அம்மா வோடி (Amma Vodi), வித்யா தீவேனா (Vidya Deevena), மற்றும் வசதி தீவேனா (Vasati Deevena ) போன்ற நலத்திட்டங்கள் மானிய உதவி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கும் வழங்கப்பட்டாலும் கூட, சேர்க்கை அதிகரிக்கவில்லை. பலர் அரசு சலுகைகளைப் பெறுகிறார்கள், ஆனால் நல்ல கற்பித்தல் தரத்தை பராமரிக்கவில்லை, ”என்று அமைச்சர் சுரேஷ் கூறினார்.

அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட குழு அனைத்து உதவித்தொகை கல்வி நிறுவனங்களையும் கையகப்படுத்த பரிந்துரைத்தது. 133 பட்டப்படிப்புக் கல்லூரிகளில், 125 கல்லூரிகள் கிட்டத்தட்ட 93 சதவிகித கல்லூரிகள், இதுவரை தங்கள் உதவித்தொகை அந்தஸ்தை ஒப்படைத்துவிட்டன, மேலும் அதன் ஊழியர்களை அரசாங்கத்திற்கு ஒதுக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். குறைந்தது ஏழு நிறுவனங்கள் தங்கள் சொத்துக்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க ஒப்புக்கொண்டன.

இதேபோல், 122 இளநிலை கல்லூரிகளில் 103 கல்லூரிகள் அதாவது 84 சதவீத கல்லூரிகள் உதவித்தொகை வழங்கும் நிலையை விட்டுவிட்டன; ஐந்து கல்லூரிகள் தங்கள் சொத்துக்களை தங்கள் ஊழியர்களுடன் தானாக முன்வந்து அரசிடம் கொடுத்துள்ளனர்.

மேலும் 1,276 உதவி பெறும் பள்ளிகள் தங்கள் அந்தஸ்தை விட்டுக்கொடுக்க ஒப்புக்கொண்டன; 100 பள்ளிகள் தங்கள் சொத்துக்களை அரசுக்கு கொடுக்கின்றன. கல்வித் துறை அவற்றை அரசுப் பள்ளிகளாக நடத்தும், அவை எதுவும் மூடப்படாது என்று அமைச்சர் உறுதியளித்தார்.

ஒப்பந்தத்தில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களின் பிரச்சனைகளும் பரிசீலிக்கப்படுவதாகவும், அவர்களின் வேலைகளைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் சுரேஷ் கூறினார். சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது, அதனால் ஒப்பந்த ஆசிரியர்கள் கவலைப்பட தேவையில்லை, ஏனெனில் இந்த நிறுவனங்களை வலுப்படுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது, என்றும் அமைச்சர் கூறினார்.

எவ்வாறாயினும், பல கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இடையே தேர்வு செய்வதற்கான விருப்பத்தை அரசாங்கம் எடுத்துக்கொள்வதாக உணர்கிறார்கள்.

“பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த விருப்பத்தை அரசு எடுத்துக்கொள்வதால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அரசு உதவி பெறும் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு நல்ல பெயரும் அங்கீகாரமும் உண்டு; அவர்களில் பலர் மிகவும் புகழ் பெற்றவர்கள். முற்றிலும் லாபம் ஈட்டும் நிறுவனங்களுக்கான மானியங்களை அரசாங்கம் நிறுத்தலாம், ஆனால் நல்ல தரத்தை பராமரிக்கும் புகழ்பெற்ற நிறுவனங்களை அனுமதிக்கலாம்,” என்று ஆசிரியர் தொகுதி சட்டமேலவை உறுப்பினர் கே.நரசிம்ம ரெட்டி கூறினார்.

ஆந்திராவின் தனியார் ஆசிரியர் சங்கத்தைச் சேர்ந்த முகமது நசீர் கூறுகையில், அரசாங்கத்தின் உத்தரவாதங்கள் இருக்கின்றபோதிலும், நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் வேலை இழக்க நேரிடும் என்றார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Education Andhra Pradesh
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment